கர்நாடகாவில் உள்ள சுளவாடி என்ற கிராமத்தில் கிச்சுக்குத்தி மாரம்மா என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கலச பூஜை நடைபெற்றது. அப்பொழுது, பக்தர்களுக்கு தக்காளிசாதம் மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
அந்த பிரசாதத்தில் கோவில் பூசாரி தனது பகையாளி குடும்பத்தை பழிவாங்கும் நோக்கில் விஷம் கலந்துள்ளார். இதனால் அதை சாப்பிட்ட பன்னிரண்டு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்து விட்டனர். மேலும், நூறுக்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர்.
இதனை தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நுறு பேரில் அடுத்தடுத்து மூன்று பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். ஆக மொத்தம் பதினைந்து பேர் இறந்தனர்.
இதுகுறித்து, கோவில் நிர்வாகி உள்பட 7 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், முக்கிய நபரான கிருஷ்ணகிரியை சேர்ந்த காலப்பா என்ற பூசாரியை பிடிப்பதற்காக போலீசார் கிருஷ்ணகிரி சென்றுள்ளனர்.