2019 ஜனவரியில் மைத்திரியின் நிலை???

அரசியலமைப்பின் படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே போட்டியிட வேண்டும் என தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பிரதமர் மாற்றப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பிரதமர் மீதான பிரேரணை ஏற்றுக்கொள்ளாதமை போன்ற விடயங்களில் ஐக்கிய தேசியக்கட்சி கடும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்ப்பு போராட்டத்தின் போது ஜனாதிபதி தேர்தலையும், பொது தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த ஜனாதிபதி முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

அத்துடன் அடுத்த தேர்தலிலும் ஜனாதிபதியே போட்டியிட வேண்டும் என்ற கருத்துக்களும் கூறப்பட்டு வந்த நிலையில் மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்