தூக்கில் தொங்கிய மகள்.. தாய் செய்த காரியம்..!

மதுரைக்கு அருகே உள்ள கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவரது மகள் பெயர் ரோகிணி. அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-டூ படித்து வந்துள்ளார்.

நேற்று விடுமுறை தினம் என்பதால், ரோகினி வெகு நேரம் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. வெகு நேரம் தூங்குவது குறித்து தங்கம் ரோகிணியை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ரோகினி, வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தங்கம் தான் தீட்டியதால் மகள் தற்கொலை செய்து கொண்டாள் என்ற மன விரக்தியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிட்டில், கண்ணாடி துகள்களை அரைத்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் தங்கம்.

வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி தங்கம் பரிதாபமாக இறந்து போனார்.

மகளை இறந்த சோகத்தில் தாயும் விபரீத முடிவை தேடிக்கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.