காதலனுக்காக, கணவன் கட்டிய தாலியை கழட்டி மனைவி செய்த துரோகம்!.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகள் ரம்யா பட்டதாரியான இவர் எடப்பாடி மோட்டூர், காட்டுவளவு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

ரம்யாவின் காதல் விஷயத்தை அறிந்த ரம்யாவின் குடும்பத்தினர், கண்டித்துள்ளனர். இதனால் ரம்யா இரண்டு முறை தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரம்யாவின் பெற்றோர் ரம்யாவிற்கு உடனடியாக திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதனால் அவசர அவசரமாக அவர்களின் சொந்தத்தில் அருள்குமார் என்பவருடன் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். காதலனை மறக்கமுடியாத ரம்யா திருமணமாகி ஒரு மாதம் வரை மனக்கசப்புடன், பல்லை கடித்துக்கொண்டு வாழ்ந்துள்ளார்.

பின்னர் ஒரு மதத்திலே அருள்ராஜ் கட்டிய தாலியை கழற்றி வைத்து விட்டு ரம்யா தலைமறைவாகியுள்ளார். ரம்யாவை காணாததை அறிந்த குடும்பத்தினர் ரம்யாவை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இதனையடுத்து, ரம்யா காட்டுவளவு பகுதியை சேர்ந்த காதலன் சிவகுமார் வீட்டில் தங்கியிருப்பதை அறிந்துள்ளனர். மேலும் காதலனுடன் சேலம் காவல்நிலையத்திற்கு சென்ற ரம்யா, தனக்கு ‌கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ரம்யாவின் விருப்பப்படி கா‌தலன் சிவகுமாருடன் சேர்த்துவைக்கப்பட்டார்.