சிறுமிக்கு சாக்லேட் தருவதாக அழைத்துச்சென்று பலாத்காரம் செய்த கொடூரன்!

அரியானா மாநிலத்தில் 7 வயது சிறுமி, 35 வயது நிரம்பிய கொடூரனால் மிகவும் மோசமான நிலையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த ராஜன் என்பவன் சிறுமிக்கு இனிப்புகள் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவன் தப்பி ஓடி விட்டான்.

இளம் சிறுமி என்று கூடபராமல் சீரழித்துள்ளான் அந்த கயவன். இதனையடுத்து மிகவும் மோசமான நிலையில் இருந்த அந்த சிறுமி தானாகவே எழுந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

உடம்பில் ரத்தத்துடன் வந்த சிறுமியை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்து விசாரித்துள்ளனர். சிறுமி கூறியதை கேட்டு பதறிப்போன பெற்றோர் மகளை மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து காவல்துறையிலும் புகார் அளித்தனர். அந்த வாழத்தகுதியற்ற கயவனை போலீசார் தேடிவருகின்றனர்.