அரியானா மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபரால் கூடுதல் செஷன்ஸ் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் Arcadia அருகே உள்ள சந்தை பகுதியில் இன்று மதியம் 3.30 மணிக்கு கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
பொதுமக்கள் அதிகமாக கூடியிருந்த அந்த இடத்தில் பாதுகாவலர் உடை அணிந்திருந்த அந்த நபர், தன்னுடைய கைத்துப்பாக்கியை வைத்து நீதிபதி கிருஷ்ணந்த் சர்மாவின் மனைவி மற்றும் மகனை சுட்டுள்ளார்.
Horrific pic.twitter.com/P2nbLQoegr
— Antonio (@Antonio__Singh) October 13, 2018
இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர்.
இந்த சம்பவத்தை பார்த்து பதறிப்போன பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் அவர்கள் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிதாரரான மஹிபாலை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.