ஏ-9 வீதியில் கோர விபத்து…!!

A9 வீதி மாங்குளத்தில் இன்று (25.08.2018) அதிகாலை பாரவூர்தி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. பொருட்களுடன் அதிவேகமாக பயணித்த பாரவூதி கட்டுப்பாட்டை இழந்து சிறிய பாலம் ஒன்றில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி தூக்க கலக்கத்தில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.