இதனால்தான் மாரடைப்பு அதிக அளவில் வருகிறது… தெரியுமா?

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே உண்மையான பலசாலி ஆவான்.

‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம். ஆத்திரம் அழிவைத் தரும்’ என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்.

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறை காரணமாக உண்டாகிறது.

நாம் சொல்வதை மற்றவர்கள் மதிக்காத போதும், நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போதும், நான் சொல்வது (தவறாக இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போதும், எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போதும் கோபம் ஏற்படுகிறது.

உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன.

நம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவை வாழ்வின் சந்தோசத்தை அழித்துவிடும். திருமணம் உள்பட பல தொடர்புகளையும் அழித்துவிடும்.

தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது. மன இறுக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

முறையாக சிந்தித்து செயல்படுவதை தவிர்த்து நமது செயல்களை தவறானதாக்கிவிடுகின்றது.

கோபம் மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கோபம் மாரடைப்புக்கு வழிவகுக்கும். 26 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்களினால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

கோபமானது இதய இரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும்.

இது மாரடைப்பில் விட்டு விடும். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம், நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படுகின்றன.

கோபம் மூளையைத் தாக்கும், பக்கவாதத்துக்கு கூட காரணமாக அமைவதுண்டு என சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. கோபம் உங்களை அளிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்துவிட வேண்டியது முக்கியம்.

கோபத்தை கட்டுப்படுத்துதல்:-

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கின்றான். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, இரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சனைகள் தோன்றுகின்றன.

கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பைக் கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

அவசரம் ஒருபோதும் வேண்டாம், பொறுமையாக இருங்கள்.

நேரம், மேம்பாடு மற்றும் சுய கட்டுபாட்டை கடைப்பிடியுங்கள்.

செய்யும் வேலையை நேசத்துடன், நேர்மையுடன் செய்யுங்கள்.