தனியார் ஊழியர் சங்கம்!!

யாழ்ப்பாண மாவட்ட தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து வைத்துள்ளனர்.யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்  நேற்றுக்  காலை 10 மணியளவில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.சங்கத்தின் போசகராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் தனியார் ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக எஸ். லக்ஸனும், செயலாளராக ரி.தியாகேந்திரனும் தெரிவாகினர்.
மேற்படி நிகழ்வில் சங்கத்தின் பணிகள் மற்றும் சட்டதிட்டங்கள் தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சிறப்புரை வழங்கியுள்ளர்.