நயன்தாராவின் 55-வது படத்தின் தலைப்பு வெளியாகும் தேதி அறிவிப்பு

நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் வெளியான ‘இருமுகன்’, ‘காஷ்மோரா’ படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து மீஞ்சூர் கோபி இயக்கும் புதிய படத்திலும், ‘டோரா’ என்ற படத்திலும் நயன்தாரா பிசியாக நடித்து வருகிறார். இதில், மீஞ்சூர் கோபி இயக்கும் படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கப்படாமல் படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், வருகிற 17-ந் தேதி இப்படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்பாடி ஜெ.ரமேஷ் தயாரித்து இருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், ரமேஷ் மற்றும் வேலு ராமமூர்த்தி, ராமதாஸ், சுனு லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் நயன்தாரா நடிக்கும் 55-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தில் படுக்கையிலிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் நற் செய்தி

வட மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணங்களினாலும் காயங்களுக்கு உள்ளாகி முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயாளிகளின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு விசேட நடமாடும் மருத்துவ சேவை ஒன்றினை வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது.

இந்த நடமாடும் மருத்துவ சேவைக்குழுவில் மருத்துவ தாதிய உத்தியோகத்தர், உளநலஆலோசகர் மற்றும் சுகாதார பணியாளர் ஆகியோர் இடம்பெறுவரென சுகாதார அமைச்சரின் ஊடக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுயமாக நடமாடமுடியாது தொடர்ந்தும் படுக்கையிலிருக்கும் நோயாளிகள் படுக்கைப்புண் மற்றும் பல்வேறுபட்ட உபாதைகளை எதிர்நோக்குகின்றனர். சுயமாக நடமாட முடியாமையினால் தமது மருத்துவ தேவைகளை நிறைவேற்ற மற்றவர்களில் தங்கி வாழுகின்றனர்.

இவர்களின் நன்மை கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் விசேட நடமாடும் மருத்துவ சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதியுதவி புலம்பெயர் நாடுகளில் வாழும் தாயக உறவுகளினால் வழங்கப்படுகின்றது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்தவாரங்களில் இந்த மருத்துவ நடமாடும் சேவை ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெற விருப்புவோர் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அவசர அம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி இலக்கங்களான 021 2224444 அல்லது 021 2225555ற்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நோயாளர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழு தேவையேற்படின் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு நோயாளர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ சேவைக்கு கனேடிய செந்தில்குமரனின் ‘நிவாரணம்’ நிறுவனமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ சேவைக்கு கனேடிய தமிழர் தேசிய அவை அமைப்பும் நிதியுதவி வழங்கி வருகின்றது.

எதிர்வரும் காலங்களில் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் இந்த சேவை விஸ்தரிக்கப்படவுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு வெளிநாடு செல்ல முடியாது! காரணம் என்ன?

தற்போதைய நிலவரப்படி ஜனாதிபதிக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன் பில குற்றம் சுமத்தினார்.

வரவு செலவு திட்டம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நிதி அமைச்சர் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டமானது, நாட்டு மக்களை குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. அனைத்து விடயங்களுக்கும் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது, இது பொது மக்களுக்கு பாதிப்பே தவிர வரவேற்கத்தக்கது அல்ல.

அதே போன்று வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக ஜனாதிபதிக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டு விட்டது அப்படி செல்ல வேண்டுமானால் அவரும் அதிக வரிகளை செலுத்த வேண்டியுள்ளது.

முறைகேடான வரவு செலவு திட்டத்தினை முன்வைத்து ஜனாதிபதியையும் இக்கட்டில் தள்ளி விட்டார் நரித் தந்திரமுடைய ரவி.

அதேபோன்று தனது இலாபத்திற்காக வரவு செலவு திட்டத்தினை முன்வைத்துள்ள நிதி அமைச்சர், ஜனாதிபதியையும், பிரதமரையும் மட்டுமே மையப்படுத்தி வரவு செலவு திட்டத்தினை அமைத்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த வரவு செலவு திட்டமானது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை, அதனால் சிறிதளவாவது அறிவுபூர்வமாகவும், சாத்தியப்படும் வகையிலும் சபைக்கு கொண்டு வாருங்கள், எனவும் உதய கம்மன் பில கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடன் இணையும் திரிஷா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை ரஜினியின் மருமுகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டு விட்டாலும், அடுத்த வருடம்தான் இப்படத்தின் பணிகளை தொடங்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவுகிறது. திரிஷா சினிமாவுக்குள் நுழைந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை ரஜினியுடன் ஜோடி சேர்ந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் கூடவே நடந்து வருகிறது. ரஜினி தற்போது ‘2.ஓ’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு பா.ரஞ்சித் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. இப்படம் ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என்பது குறித்து படக்குழுவினர் இன்னும் வாய் திறக்கவே இல்லை.

வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்களின் வங்கி தரவுகளை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கி தரவுகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் 14 வங்கிகளிடமிருந்து தரவுகளை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(15) கோரிக்கை விடுத்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்களின் கோரிக்கைக்கு அமைய ஊர்காவற்துறை நீதவான் ஏ.எல்.எம் றியால் இன்று அதற்கான அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய 12சந்தேகநபர்களின் விளக்கமறியலும் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சந்தேகநபர்களை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் ஏ.எல்.எம் றியால் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம் புங்குடுதீவில, மாணவி வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தற்கொலையில் முடிந்த சிறுமியின் காதல் தோல்வி

யாழ்ப்பாணம்-இளவாலையில் பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று(14) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாகவே குறித்த சிறுமி தற்கொலை செய்து கொண்டிருப்பார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் விரியன் பாம்பின் வேட்டையாடும் தந்திரத்தை பாருங்கள்

நடமாடும் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட நால்வரை சுற்றிவளைத்த பொலிஸார்!

பம்பலப்பிட்டி பகுதியில் நடமாடும் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட நான்கு பேரை பொலிஸார் இன்று (15) காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் வேன் ஒன்றில் வைத்து கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவரே ஈடுப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண்கள் 23 மற்றும் 28 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், மின்னேரியா, உடவளவ மற்றும் குண்டசாலை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்- ஐஸ்வர்யா பற்றிய ரகசியம் இதோ

தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறக்கும் நடிகர் தனுஷ், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தபோது, ஆரம்பத்தில் இதனை மறுத்து வந்தனர். ஆனால், திடீரென இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

தங்களது காதல் குறித்து தனுஷ் கூறியதாவது, லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில்தான் நான் படித்தேன்.

அப்போது ஐஸ்வர்யாவும் என்னோடுபடிச்சாங்க. என் சகோதரியும் ஐஸ்வர்யாவும் நல்ல தோழிகள். பள்ளியில் படிக்கும்போது நானும், ஐஸ்வர்யாவும்நட்பாகத்தான் பழகினோம்.

படிப்பு முடிந்து நான் சினிமாவுக்கு வந்த பின்பு, நீண்ட நாட்கள் நாங்கள்சந்திக்கவில்லை. துள்ளுவதோ இளமை படம் வெளியானபோது ஐஸ்வர்யா எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க.

ஒவ்வொருகாட்சியையும் புகழ்ந்தாங்க. எங்கள் நட்பு மீண்டும் தொடர்ந்தது. பிறகு அடிக்கடி என் வீட்டுக்கு அக்காவை பார்க்கவந்தபோது, என்னுடனும் நிறைய நேரம் பேசுவார்கள்.

காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் படங்களையும் பார்த்து விட்டுபாராட்டினாங்க.

அந்த சமயங்களில்தான் எங்கள் நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் காதலாக மலர்ந்தது. வீட்டுக்குத்தெரியாமல் நீண்ட நாட்கள் காதலிச்சோம். பின்பு திருமணம் செய்துக்க முடிவெடுத்து, எங்கள் காதலை இரு வீட்டு பெற்றோரிடமும் சொன்னோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள் என கூறியுள்ளார்.

அனைத்துமே ஏமாற்றம் – ஆவேசமடையும் நாமல்!

முழு நாட்டையும் விற்று விட்டு இலாபம் தேடும் முயற்சிக்கு அடித்தளமாகவே இந்த வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது, என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.

வரவு செலவு திட்டம் தொடர்பான இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மகிந்த ஆட்சியின் போது அமைத்த அனைத்தும் தற்போது விற்கப்படுகின்றது. விற்பனை செய்வது என்பது இலகு, ஆனால் உருவாக்குவது என்பது கடினம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட அனைத்தும் இப்போது விற்கப்படுகின்றது.

மகிந்த ஆட்சியின் போது துறைமுக நகரத்தினை உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சீன நாட்டிற்கு இலங்கையை விற்கின்றோம், என கூக்குரல் எழுப்பியவர்கள் இப்போது அதனையே செய்து வருகின்றார்கள்.

மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வகையிலேயே நல்லாட்சி செயற்பட்டு வருகின்றது. விவசாயம், கல்வி, அபிவிருத்தி உட்பட அனைத்து துறைகளிலுமே மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.

இளைஞர் யுவதிகள் இம்முறை வரவு செலவு திட்டத்தின் மூலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை கொண்டிருந்தார்கள், ஆனால் அனைவருமே ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

நாட்டை அபிவிருத்தி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றுங்கள் எனவும் நாமல் கேட்டுக்கொண்டார்.

​பாலியல் சீண்டல் பற்றி பேசிய நமீதா

பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன் என்று நமீதா ஒரு படவிழாவில் துணிவாகப் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’. இப்படத்துக்கு ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார். தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் ,நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் நமீதா பேசும் போது ” இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ச்சி. சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும்,செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன .அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்.

இந்தப் படம் பற்றி பேசும்போது, குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி ,அதாவது நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம் என்று உணர முடிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.ஆம்.

நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக்கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக்கொள்கிறேன்.

ஒரு விஷயம் ,ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன.

நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது,நல்ல டியூஷன் மட்டும் கொடுத்தால் போதாது. நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்,அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள்,நிறைய பேசுங்கள் .இதை அம்மா அப்பா இரண்டு பேருமே செய்யுங்கள் இந்தப் படம் குழந்தைகள் பற்றி சிந்திக்க வைக்கும்படி இருக்கும் என நம்புகிறேன் .இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்.

மீன்குழம்பும் மண்பானையும்

நடிகர் காளிதாஸ் ஜெயராம்
நடிகை ஆஷ்னா சாவேரி
இயக்குனர் அமுதேஸ்வர்
இசை டி.இமான்
ஓளிப்பதிவு லக்ஷ்மன்

இன அழிப்புக்கு தயாராகும் இலங்கையின் திக்.. திக் பயணம்! (காணொளி இணைப்பு)

அன்றாடம் தற்போது பகிரங்கமான முறையில் இனவாதம் பரப்பப்பட்டு வருகின்றது, அவற்றின் பின்னணியில் பிக்குமார்கள் இருந்து செயற்பட்டு வருவது ஆதார பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இன்று அநுராதபுரத்தில் பிக்குகள் தலைமையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, குறித்த கூட்டத்தில் இளைஞர் ஒருவர் உரை நிகழ்த்துகின்றார்,

அவரது உரை மேற்கண்டவாறு அமைகின்றது,

நாட்டில் முஸ்லிம் இனத்தவர் தற்போது இனவாதத்தினை பரப்பி வருகின்றார்கள், அவர்களை அடக்கி ஒடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு சிங்களவர்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இது வரையில் பொறுத்திருந்தது போதும் அடித்து விரட்ட வேண்டும் அவர்கள் அனைவரையும், நாட்டில் தற்போது பள்ளிவாசல்கள் ஊடாக தீவிரவாதமானது கற்று கொடுக்கப்படுகின்றது, அதேபோல் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் தற்போது இலங்கையில் உள்ளனர்.

இன்னுமொரு பிரபாகரன் உருவாகும் வரையில் நாம் பொறுமையாக இருப்போமானால் சிங்களவர்களின் தலைகளை வெட்டி எடுக்கும் நிலை உருவாக்கப்பட்டு விடும் என்பதனை அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்.

சக்தி மிக்க சிங்கள இளைஞர்களே, அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள், உங்களுக்கு பலம் உள்ளது, தற்போது எனக்கு படைகள் அவசியமாகின்றது. எம்முடன் அனைவரும் ஒன்றிணைந்து வாருங்கள்.

இந்த நாட்டினை கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம்கள் ஆக்ரமித்து கொண்டிருக்கின்றார்கள், அனைவரும் பொறுமையாக இருக்கின்றார்கள் இப்படியே இருந்தோமானால் இலங்கையில் இருந்து அனைத்து சிங்களவர்களும் அழிக்கப்படுவார்கள்.

என்றவாறு சிங்கள மக்களிடையேயும், இளைஞர்களிடையேயும் முற்றிலும் வெறி ஏற்படுத்தும் வகையில் அவர் உரை நிகழ்த்தி உள்ளார்.

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்ட ஓர் இடத்தில் இவ்வாறான உரையினை அவர் நிகழ்த்தியுள்ளார். இதனை கேட்டு கொண்டிருக்கும் இளைஞர்கள் மன நிலை எவ்வாறு அமையும், அடுத்த கட்டம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இது வரையில் வெளிப்படை இல்லை.

ஆனாலும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசு தரப்பு மௌனமாக இருப்பதும், அனுமதியும் கொடுத்து கொண்டிருப்பதும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இவற்றினை உடனடியாக பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமாகின்றது எனவும் கூறப்படுகின்றது.

இன்னும் 100 வருடம் ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாத மர்மங்கள்

நன்மையளிக்கும் விஷ்ணு காயத்ரி மந்திரம்

காக்கும் கடவுள் என்று சிறப்பு பெயர் பெற்றவர் மகாவிஷ்ணு. வைணவ சமயத்தின் தலைவனாக விளங்கும் இவர், நீலநிற மேனியை கொண்டவர். வைணவ சமயத்தில் பரமாத்மாவை அடைவது எளிதான முறையாகக் கூறப்பட்டிருக்கிறது. இதில் விக்கிரக ஆராதனைக்கு முக்கியத்துவம் அதிகம். பரிசுத்தமான பக்தியுடன் பெருமாளிடம் சரணாகதி அடைந்தால், அகங்காரம் அழிந்து, ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றிவிடுவது சாத்தியமாகும். இதுவே வைணவ சமயத்தின் தத்துவம்.

விஷ்ணு என்பதற்கு எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள். விஷ்ணுவுக்கு நாராயணன் என்ற பெயரும் உண்டு. ‘நாரம்’ என்றால் ‘வெண்ணிற நீர்’, ‘அயனம்’ என்றால் ‘இடம்’ என்று அர்த்தம். வெண்மை நிற பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டவன் என்பதால் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார். வைணவ சமயத்தில் மந்திரங்கள் மூன்று வகையாக உள்ளன. அவை, அஷ்டாச்சரம் (எட்டெழுத்து), துவய மந்திரம் (சரணாகதி), சரமஸ்லோகம் என்பன. இவற்றில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

விஷ்ணு காயத்ரி மந்திரத்திலும் ‘நாராயணாய’ என்ற மந்திரம் வருகிறது. தினமும் இறைவழிபாடு செய்யும்போது, விஷ்ணுவின் மந்திரங்கள் பலவற்றை கூறி வழிபடுகிறோம். அதோடு விஷ்ணு காயத்ரி மந்திரத்தையும் உச்சரித்து வருவது மிகவும் நன்மையளிக்கும்.

விஷ்ணு காயத்ரி மந்திரம்

‘ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்’

– பரம்பொருளான நாராயணனை அறிவோம். வாசுதேவன் மீது தியானம் செய்வோம். விஷ்ணுவாகிய அவன் நம்மை காத்து அருள் செய்வான் என்பது இதன் பொருளாகும்.

விஷ்ணுவை வழிபடும் போது, தினமும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வரலாம். இந்த மந்திரத்தைச் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். உலக இன்பங்களை அனுபவிக்கலாம். மறுபிறவி நல்லவிதமாக அமையும். பாவங்கள் அகலும். நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள்.

மனிதன் விட வேண்டிய 21 தீய குணங்கள்

ரஜினியெல்லாம் கருப்பு பணம் ஒழிப்பது குறித்து பேசவே கூடாது! (காணொளி இணைப்பு)

கருப்பு பண விவகாரத்தில் பிரபல இயக்குனர் அமீர் இந்திய பிரதமர் மோடியையும், ரஜினியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு இயக்குனர் அமீர் பேசியதாவது,

மோடி, அம்பானி போன்ற பணக்காரர்களின் ஆதரவோடு விளம்பரத்தின் மூலம் இந்திய பிரதமரானார்.

தற்போது, தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வழியில்லாமல் தான் கருப்பு பணம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.

ஒரே இரவில் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவத்தார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் அறிவிப்பு புரட்சி என மாவீரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

இதுவரை எந்த விஷயத்திலும் குரல் கொடுக்காத ரஜினிகாந்த், தற்போது 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன?

மேலும் கபாலி திரைப்பட டிக்கெட் அரசு நிர்ணயித்த விலைக்கு தான் விற்பனையானதா? அப்படியெனில், ‘கபாலி’ திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்து ரஜினி கணக்கு காட்ட முடியுமா?

150 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சம்பாதிக்கும் ரஜினி கருப்பு பணம் ஒழிப்புக்கு ஆதரவு தெரிவிப்பது அநியாயம் என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

முருகப்பெருமானுக்கு யானை வாகனம்

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து தேவர்களை காத்து அருளினார் முருகப்பெருமான். இதற்கு பிரதிபலனாக, இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார்.

திருமணம் முடிந்ததும் தெய்வானையுடன் முருகப்பெருமான் திருத்தணியில் வந்து அமர்ந்ததாக கூறப்படுகிறது. தெய்வானைக்கு சீதனமாக ஐராவதம் யானை வழங்கப்பட்டதாக புராணம் கூறுகிறது.

எனவே திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது.

மிச்செல் ஒபாமா ஒரு குரங்கு: இனவெறி கருத்து கூறிய மேயரின் பதவிக்கு ஆபத்து

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமாவை வாலில்லா குரங்கு என விமர்சனம் கூறிய அந்நாட்டு பெண் மேயர் ஒருவரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய மூன்றாவது மனைவியான மெலினியா அந்நாட்டின் முதல் குடிமகள்(First Lady) என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

இது குறித்து மேற்கு வெர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறையின் இயக்குனரான Pamela

Ramsey Taylor என்பவர் சமூக வலைத்தளத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஆஹா, அமெரிக்க நாட்டிற்கு தற்போது ஒரு அழகான, நாகரீகமான முதல் குடிமகள்(மெலினியா டிரம்ப்) கிடைத்துவிட்டார். கடந்த 8 ஆண்டுகளாக வாலில்லா குரங்கு போன்ற தோற்றம் உடைய முதல் குடிமகளை(மிச்செல் ஒபாமா) பார்த்து மிகவும் சோர்வடைந்து விட்டேன்’ எனக் கருத்து கூறியுள்ளார்.

இயக்குனரின் இக்கருத்தை அந்நகர பெண் மேயரான Beverly Whaling என்பவரும் உற்சாகமாக வரவேற்று அக்கருத்தை மகிழ்ச்சியாக பலருடன் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் மற்றும் மேயரின் இனவெறி தொடர்பான இக்கருத்திற்கு தற்போது பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

மேலும், இருவரையும் உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாகாணத்தில் உள்ள கருப்பின மக்கள் உள்ளிட்ட பலர் போராடி வருகின்றனர்.

ஆச்சர்யம் ஆனால் உண்மை: டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஆனது ஒரு நாட்டிற்கு மட்டும் தெரியாது

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள தகவல் ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா குடிமக்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை என வெளியாகியுள்ள தகவல் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த உலக நாடுகள் அனைத்தும் பரபரப்பாக அமெரிக்க தேர்தலை உணிப்பாக கவனித்து வந்தது அனைவரும் அறிந்தது தான்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக அரசியல் பின்னணி இல்லாத டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது உலக நாடுகள் அனைத்திலும் முக்கிய செய்தியாக வெளியானது.

இதுமட்டுமில்லாமல், இன்றளவும் டொனால்ட் டிரம்பின் வெற்றியை தான் முக்கிய செய்தியாக உலக பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன.

ஆனால், ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா குடிமக்களுக்கு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது இதுவரை அந்நாட்டு அரசு தெரியப்படுத்தாமால் ரகசியமாக வைத்து வருகிறது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவில் உள்ள பி.பி.சி செய்தியாளர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், ‘அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பற்றி இங்குள்ள ஒருவருக்கும் எதுவும் தெரியாது.

கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டு 3 நாட்களுக்கு பிறகு தான் தனது குடிமக்களுக்கு வட கொரியா அரசு அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியது’ என அந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் வெறுப்பையும் அதிருப்தியையும் பெற்று வரும் வட கொரியா அரசு அங்கு ஒரு தனி உலகத்தையே நடத்தி வருகிறது.

வட கொரியா நாட்டில் தனியார் தொலைக்காட்சிகள் செயல்பட அனுமதி கிடையாது. இதனால், அரசு அதிகாரப்பூர்வமாக ஒளிப்பரப்பும் தகவல் மட்டுமே குடிமக்களுக்கு சென்றடையும்.

சில முக்கிய அதிகாரிகள் தவிர நாடு முழுவதும் இணையத்தளம் பயன்படுத்த குடிமக்களுக்கு தடை உள்ளதால் அவர்களால் இணையத்தளம் வழியாகவும் இச்செய்தியை அறிந்துக்கொள்ள முடியாது.

மேலும், வட கொரியா நாட்டிற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினர்கள் கைப்பேசி வைத்துக்கொள்ள அனுமதி இல்லாததால் அவர்கள் மூலமும் குடிமக்கள் செய்தியை தெரிந்துக்கொள்ள வாய்ப்பில்லை.

இதுபோன்ற ஒரு சூழலில் இதுநாள் வரை வட கொரியா குடிமக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி யார் என்ற தகவல் தெரியப்படுத்தவில்லை என்பது பெரும் வேதனையான செய்தியாகும்.