ஓடும் பேருந்தில் முகம் சுளிக்க வைக்கும் செயலில் ஈடுபட்ட இளைஞர்கள்

நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றில் இளம் பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பேருந்து நடத்துனரை ​​தாக்கி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடவத்தை கிரில்லவல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் இன்று (07) காலை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரண்டு இளைஞர்களும் பேருந்தில் ஏறி, பல அருக்கைகள் முழுவதுமாக காலியாக இருந்தபோதிலும், இளம் பெண்களுக்கு அருகில் அமர்ந்து பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு நடந்து கொண்டிருந்ததை அவதானித்த பேருந்து நடத்துனர் இளைஞர்களை எச்சரித்துள்ளார். இதன் போது சந்தேக நபர்களில் ஒருவர் நடத்துனரை சிறிய கத்தியால் தாக்க முயன்றுள்ளார்.

பேருந்து, கிரில்லவல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நின்றதும், சந்தேக நபர்கள் இருவரும் வீதியில் அமைக்கப்பட்டிருந்த மரக் கம்பத்தை உடைத்து, நடத்துனரை கொடூரமாகத் தாக்கி தப்பி சென்றுள்ளனர்.

பேருந்தின் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் சந்தேக நபர்கள் இருவரையும் துரத்தி பிடித்து, கட்டி வைத்து தாக்கியுள்ளனர். பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் பொலிஸில் புகார் அளித்துள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த நடத்துனரை மருத்துவமனையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், நாளை (08) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைதீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

முல்லைத்தீவு(mullaitivu) மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க(bimal rathnayake).

இதன்படி முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

ஓகஸ்ட் மாதம் நிர்மாணப் பணி
நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரி (டிசைன்) திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்ற சுப செய்தியை வெளியிடுகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு 2025 வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் உரிய வகையில் ஆரம்பமாகவுள்ளதுஎனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

ஜரோப்பிய நாட்டில் செல்வந்தராக வாய்ப்பு!

யூரோ மில்லியன்ஸ் லாட்டரியில் £208 மில்லியன் ஜாக்பாட் வெல்லும் அதிஷ்ட வாய்ப்பு இன்னமும் காத்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற குலுக்கலில் யாரும் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படாததால், இந்த லொட்டரி பரிசுத் தொகை மேலும் உயர்ந்துள்ளது.

இதனால், செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அடுத்த குலுக்கலில் பரிசுத் தொகை £208 மில்லியனாக அதிரித்துள்ளது.

முந்தைய £199 மில்லியன் தொகையும் வெற்றி பெறாத நிலையில், இந்த மெகா ஜாக்பாட் இன்னும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, இந்தப் பெரிய தொகையை வெல்லும் நபர், பிரபல பாடகர்கள் அடெல் மற்றும் ஹாரி ஸ்டைல்ஸை விட அதிக செல்வந்தராக மாறுவார்.மேலும், இது தேசிய லாட்டரி வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய மிகப்பெரிய வெற்றியாகும்.

இது தொடர்பில் யூரோ மில்லியன்ஸ் லாட்டரிக்கான மூத்த ஆலோசகர் ஆண்டி கார்ட்டர் கூறுகையில், “தற்போது ஜாக்பாட் உச்ச வரம்பை எட்டியுள்ளது. எனவே, இதைத் தொடர்ந்து வரும் குலுக்கலில் எந்த கூடுதல் பணமும், வெற்றியாளரின் பரிசுத் தொகையில் நேரடியாக சேர்க்கப்படும்” என்றார்.

இந்த நிலையில், அதன் வெற்றியாளர்கள் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், லக்ஸம்பர்க், போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் எங்கும் பதிவாகளாம்.

அதன்படி, நேற்றைய சீட்டிழுப்பில் எந்த நாட்டிலும் ஜக்பொட் வெற்றியாளர்கள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளால் அதிகம் வெறுக்கப்படும் நாடுகள்!

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பதட்டமான நிலை இருந்து வருகிறது. சில நாடுகள் போர்களும் செய்து கொண்டிருக்கின்றன.

இது தொடர்பில் சமீபத்தில் World Population Review வெளியிட்ட அறிக்கையில், உலகத்தில் உள்ள அதிகமான நாடுகளால் வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச அறிக்கைகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் இரண்டையும் கணக்கில் வைத்து இந்த தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் அரசாங்கங்கள், கொள்கைகள் மற்றும் உலகளாவிய நடத்தை மீதான விரக்தியே இதற்கு காரணமாகும்.

அந்த வகையில் அதிகமான நாடுகளால் வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியல் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

சீனா
உலக நாடுகளில் அதிகமான நாடுகளால் வெறுக்கப்படும் நாடு சீனா தான். ஏனெனின் சர்வாதிகார ஆட்சி, அடிமைத்தனம், கருத்து சுதந்திரத்தின் மீதான தணிக்கை மற்றும் உலகளாவிய மாசுபாட்டில் அதன் பங்கு உள்ளிட்ட காரணங்களால் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஹாங்காங், தைவான் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளுக்கு சுதந்திரம் வழங்க மறுத்துள்ளது. அத்துடன் உய்குர் முஸ்லிம் மக்களை மோசமாக நடத்தும் குற்றமும் சீனாவில் நடக்கிறது. இதனால் மற்ற நாடுகள் நட்பு வைத்து கொள்ள பயம் கொள்கிறது.

அமெரிக்கா
உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்கா வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா மிகைப்படுத்திக் கொள்கிறது.

உலக நாடுகளில் நடக்கும் மோதல்களில் தேவையின்றி மூக்கை நுழைத்து ஆயுதங்களை வழங்கும். அத்துடன் அவர்களுக்கு துரித உணவு வழங்கல் இப்படி தங்களின் சுயநலத்திற்காக அந்த நிலைமையை பயன்ப்படுத்திக் கொள்ளும்.

ரஷ்யா

மூன்றாவது இடத்தை பிடிக்கும் ரஷ்ய அரசாங்கத்தின் ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கை மற்றும் அதன் குடிமக்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் தான் உக்ரைன் போர் அவ்வளவு நாட்களாக நடந்து கொண்டிருந்தன.

இந்தியா

மதரீதியான பதட்டங்கள், சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை மற்றும் இணைய தணிக்கை உள்ளிட்ட குற்றங்கள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் அதிகமான நாடுகளால் வெறுக்கப்படும் நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எல்லைப் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை உள்ளிட்டவை மற்ற நாடுகளுடன் இருக்கும் நட்பை பகைத்துக் கொள்கிறது.

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்தியவர் கைது!

கருங்கல்லு சல்லிக்குள் தேக்கம் குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்றுடன் சாரதியொருவர் இன்றையதினம்(7) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த மரக் குற்றிகளை கொண்டு வந்தபோது சாவகச்சேரி பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

15 இலட்சம் ரூபா பெறுமதியான தேக்கம் குற்றிகளை டிப்பரின் கீழே மறைத்து வைத்துவிட்டு சல்லியை ஏற்றி வந்தபோது, சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகரான மயூரன் மற்றும் கொஸ்தாபல் நிருபன் ஆகியோர் அந்த டிப்பரை சோதனையிட்டனர்.

இதன்போது அதில் மரக்குற்றிகள் ஏற்றி வந்தமை தெரிய வந்துள்ளது.

கைது நடவடிக்கை செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு!

கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதத்தில், வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 544.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.

அத்துடன் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்த பணவனுப்பல் 3,102.2 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது

பேரழிவை சந்திக்கப்போகும் உலகம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பாபா வங்காவின் கணிப்பு!

உலக மக்களால் பெரிதும் நம்பப்படும் தீர்க்கதரிசி பாபா வங்கா, தனது கணிப்பில் 2025 ஜூன் 7ஆம் திகதி பின்னர் உலகளாவிய அழிவுகள் ஏற்படும் என்று கணித்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் மூதாட்டி பாபா வங்கா. இவருக்கு 12 வயது இருக்கும்போது பல்கேரியாவில் பெரும் புயல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்குப் பார்வை பறிபோனது.

அப்போதிலிருந்து, பாபா வங்காவிற்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய காட்சிகள் மனதில் வருவதாக அவர் கூறியிருக்கிறார். மேலும், எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளதாம்.

இதைத்தான் இவர் கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இதனை, கடவுள் தனக்கு கொடுத்த சக்தியாக கருதியிருக்கிறார். பாபா வங்கா, கடந்த 1996 ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார்.

ஆனாலும் இவர் உலகைப் பற்றி கணித்து எழுதி வைத்திருந்ததெல்லாம் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி கணித்து எழுதி வைத்திருக்கும் இவர், வருகிற 5079ம் ஆண்டு உலகம் அழியும் எனவும், அதுவரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார்.

இவர், இதுவரை நடந்த உலகின் பல முக்கிய நிகழ்வுகளை மிகத் துல்லியமாக கணித்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் கடந்த 2001 ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி, அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை இவர் துல்லியமாக கணித்திருக்கிறார்.

அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்களை இவர் துல்லியமாக கணித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு ஏராளமான சம்பவங்களை கணித்திருக்கும் பாபா வங்கா, 2025லும் அவர் கணித்திருந்த மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ல் நடந்த 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியான சம்பவம் நடந்தேறியது.

மேலும், பொருளாதார வீழ்ச்சி, மூன்றாம் உலகப்போர் என என இந்த ஆண்டில் அடுத்தடுத்த சம்பங்கள் அரங்கேறும் என்று கணித்துள்ள பாபா வங்கா, ஜூன் 7ஆம் பின்னர் உலகளாவிய அழிவுகள் ஏற்படும் என்று கணித்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கையூட்டு பெற்ற அதிகாரி கைது!

நிலத்தகராறு வழக்கு தொடர்பாக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நீதிமன்ற அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நேற்று(06) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற அதிகாரியான சந்தேக நபர், வழக்கு அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட நகலை வழங்க ரூ. 5,000 இலஞ்சம் கோரியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், முறைப்பாட்டாளருக்கு எதிராக முதலில் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்ய குறித்த நகல் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்களை தாக்கும் நோய்கள்

நவீன வளர்ச்சியால் தற்போது அமர்ந்த இடத்தில் இருந்து வேலைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.

அதிலும் குறிப்பாக பெண்கள் பலர் அலுவலகத்திலும் அமர்ந்த இடத்தில் இருந்து வேலைச் செய்கிறார்கள். அதே சமயம், வீட்டில் இருந்து வேலைப் பார்ப்பவர்களும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலைப் பார்க்கிறார்கள்.

இதனால் மலச்சிக்கல், உடல் உஷ்ணம் அதிகரிப்பு, தலைமுடி உதிர்வு, அதிக உடல் எடை உள்ளிட்ட பல நோய்கள் வருகின்றன. அப்படியாயின், மேற்குறிப்பிட்ட நோய்கள் பற்றி தெரிந்திருப்போம்.

மாறாக இதை தவிர்த்து வரும் நோய்களுக்கு நீண்ட நேரம் அமர்வு தானா? காரணம் என்பதனை தொடர்ந்து பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

1. முதுகு வலி
வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் சரியாக உட்காரவில்லை என்றாலோ, மோசமான நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து வேலைப் பார்க்கும் பழக்கம் கொண்டவராக இருந்தாலும், முதுகு வலியுடன் கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் வலி ஏற்படச் செய்யும். முதுகு வலிக்கு என்ன காரணம் என தெரியாமல் இருப்பவர்கள் இனி உங்களின் இருக்கைகள் சரியாக இருக்கிறதா? என்பதனை சரிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

2. தலைவலி
தொடர்ந்து மடிகணனி அல்லது கணினி பார்க்கும் பொழுது கண்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இதனால் உங்களின் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு தலைவலியை உண்டுபண்ணும்.

4. தூக்கம் பாதிக்கப்படும்.
இரவு வெகு நேரம் திரையை பார்ப்பது உங்களின் தூக்கத்தில் தாக்கம் செலுத்தும். அதே சமயம் உங்களின் மூளையின் சுறுசுறுப்பையும் குறைக்கும். இதனால் தான் சிலருக்கு இரவில் சரியான தூக்கம் இருக்காது. சிலருக்கு தூக்கம் சரியாக இல்லாமல் உடல் சோர்வு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

5. எடை அதிகரிக்கும்.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை வரும். அதுவும் வேலை எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் இருந்து வேலைப் பார்ப்பதால் உங்களின் தசைகளுக்கு எந்தவித வேலையிலும் இல்லாமல் அது ஒரு விதமான வளர்ச்சியடையும். இதனால் தான் அதிகமான பெண்களுக்கு குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம் எடை அதிகரித்து இருக்கும்.

6. கை வலி
தொடர்ந்து தட்டச்சு செய்தல், மவுஸ் பயன்பாடு அதிகமாக இருப்பதால் “டன்னல் சிண்ட்ரோம்” ஏற்படும் அபாயம் உள்ளன. ஆகவே முடிந்தளவு ஒரே வேலையை நீண்ட நேரம் செய்வதை குறைத்துக் கொள்ளவும்.

இராஜ யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர்

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக அதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு நிழவி வருகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் வாழ்வில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காதாம். இவர்கள் வாழ்க்கை முழுவதும் சொகுசாக வாழும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி பிறப்பிலேயே ராஜ யோகம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் தங்கள் அச்சமற்ற மற்றும் லட்சிய இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். செயல் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் அவர்கள், அதிர்ஷ்டத்தை எளிதாக ஈர்க்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அது ஒரு தொழில் இலக்கைத் தொடர்வதாக இருந்தாலும் சரி அல்லது அன்பைக் கண்டறிவதாக இருந்தாலும் சரி, மேஷ ராசி பெண்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் தங்களை நிரூபிப்பார்கள்.

இவர்களின் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது. குறைந்த முயற்றசியிலேயே வாழ்வில் நிதி ரீதியாக உச்சத்தை அடையும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் ஒரு காந்தம் போல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் காந்த கவர்ச்சியுடன் பிறந்த தலைவர்கள். ஆற்றல் மற்றும் உயிர்ச்சக்தியின் மூலமான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் நம்பிக்கையையும் நேர்மறையையும் வெளிப்படுத்துகிறார்கள்.

அவர்களின் இயற்கையான வசீகரம் பெரும்பாலும் மற்றவர்கள் கவனிக்காத வாய்ப்புகளும் இவர்கள் கண்களில் பட செய்கின்றது. இந்த ராயினர் செல்வத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களை தேடி பணம் வந்துக்கொண்டே இருக்கும். இவர்கள் மற்றவர்களின் வளர்ச்சி மற்றவர்களை வியப்படைய செய்யும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசி பெண்கள் நித்திய நம்பிக்கையாளர்கள் மற்றும் சாகசக்காரர்கள். விரிவாக்கம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் கிரகமான வியாழனால் ஆளப்படும் அவர்கள், அறிவு மற்றும் ஆய்வுகளைத் தேடுவதில் அதிர்ஷ்டத்தைக் காண முனைகிறார்கள்.

தனுசு ராசிக்காரர்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்கிறார்கள், வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் நேர்மறையான கண்ணோட்டத்தின் பலன்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் வாழ்க்கை முழுவதும் செல்வத்துக்கு பஞ்சமே இருக்காது. இவர்களின் நிதி வளர்ச்சி பிறப்பின் போதே ஆரம்பிக்கின்றது. இவர்களின் அதிர்ஷ்டம் இவர்களை உச்சத்துக்கு கொண்டு செல்லும்.

2 நாட்களில் தக் லைஃப் படம் உலகளவில் செய்துள்ள வசூல்

நாயகன் படத்திற்கு பின் எப்போது கமல் ஹாசன் – மணி ரத்னம் இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பல வருட காத்திருப்பு தக் லைஃப் படத்தின் அறிவிப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. நாயகனை மிஞ்சும் அளவிற்கு தக் லைஃப் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

மேலும் இப்படத்தில் கமலுடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்தது. இதனால் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

இந்த நிலையில், இரண்டு நாட்களில் தக் லைஃப் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளது.

ரெக்கார்ட் பிரேக் செய்த விஜய்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படமாகும். அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக தனது சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல், நரேன் என பலரும் நடித்துள்ளனர். மேலும் ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் கேமியோ ரோலில் வருவதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் வெளிவரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

ரிலீஸுக்கு முன் ப்ரீ பிசினஸில் ஜனநாயகன் திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. OTT, சாட்டிலைட் உரிமைகள் மாபெரும் தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜனநாயகம் திரைப்படத்தின் மலேசியா திரையரங்க உரிமை ரூ. 12 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ் சினிமாவில் ரெக்கார்ட் பிரேக்கிங் என கூறப்படுகிறது. இதன்மூலம் புதிய சாதனையை விஜய் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடிக்காத ரோலில் நடிகர் தனுஷ்..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது. மேலும் இட்லி கடை எனும் படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார்.

இயக்கத்தை தாண்டி தனுஷ் ஹீரோவாக மட்டும் நடித்து வரும் படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜுன் மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது, தனுஷ் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்யின் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் போட்டோ
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தளத்தில் இருந்து தனுஷ் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தனுஷ் விமானப்படை அதிகாரி உடையில் இருக்கின்றார்.

இதன் மூலம் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் விமானப்படை அதிகாரியாக நடிப்பது உறுதியாகியிருக்கிறது. தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியது எந்த படத்திற்காக தெரியுமா

இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. சுக்கிரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதன்பின், ,நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், TN 07 AL 4777, ,வேலாயுதம், வேட்டைக்காரன்’ என தொடர்ந்து பல படங்களில் பணிபுரிந்து வந்தார். தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு, அதில் பல படங்களில் ஆல்பம் ஹிட் கொடுத்தார்.

இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வந்த விஜய் ஆண்டனி, ஒரு கட்டத்தில் ஹீரோவாக களமிறங்கினார். ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் ஆண்டனி, சலீம், பிச்சைக்காரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.

ரூ. 1 கோடி சம்பளம்
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இசையமைப்பாளராக எந்த திரைப்படத்திற்கு முதன் முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கினீர்கள் என விஜய் ஆன்டனியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘வேலாயுதம் படத்திற்காக தான் முதல் முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கினேன்’ என கூறியுள்ளார்.

OTT தளத்தில் மீண்டும் வெளியாகும் விடுதலை 2.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். சமூகத்திற்கு தேவையான படைப்புகளை கொடுத்து வரும் இவர் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் விடுதலை 2.

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. இதில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த இரண்டு பாகமும் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியான நிலையில், தற்போது மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்த படம் வெளியான நேரத்தில் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைம் இருந்தது.

தற்போது நீக்கப்பட்ட சில காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படமாக இப்படம் மீண்டும் வெளியாகி உள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கண்டு வருகின்றனர்.

நாட்டில் மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு…!

மின் கட்டண உயர்வு குறித்த பரிந்துரைகளை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை முடிவடைந்த பொதுக்கருத்துக் காலத்தில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் கருத்துக்களைச் சேகரித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் திட்டம்
பொது முன்மொழிவுகள், இலங்கை மின்சார சபையின் (CEB) சமர்ப்பிப்பு மற்றும் மின்சார உற்பத்தி செலவுகள் குறித்த அறிக்கைகளை மதிப்பிட்ட பிறகு PUCSL தனது பரிந்துரையை வழங்குமென தெரிவித்துள்ளது.

மேலும், ஆய்வு இப்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், மின்சாரக் கட்டணத்தை 18.3% அதிகரிக்கும் இலங்கை மின்சார சபையின் திட்டம் தொடர்பான தனது பரிந்துரைகளை அடுத்த வாரம் வெளியிட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு!

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்றையதினம் (7) இயற்கை எரிவாயுவின் விலை 3.78 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அத்தோடு, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.58 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.47 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இரு தடவை நிலநடுக்கங்கள்!

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு தடவை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கம் அதிகாலை 12.56 மணியளவில் ரிக்டரில் 4.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதேசமயம், இரண்டாவது நிலநடுக்கம் இன்று (07) அதிகாலை 1.05 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.50 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 67.82 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை

நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உபக்குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சக ஆலோசனைக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நுண்நிதி கடன்களால் கிராமப்புறப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு அமைச்சகக் குழு உறுப்பினர்களின் முன்மொழிவின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

அதன்படி, இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்மொழிய, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தலைமையில் உபக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நுண்நிதி கடன் பிரச்சினையை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதற்காக, தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து விவாதிக்கவும், பொருத்தமான திட்டங்களை முன்வைக்கவும் இந்தக் குழு நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் கூறினார்.

பெற்ற பிள்ளையை விற்க முயன்ற தாய் தொடர்பில் வெளியான மேலும் பல தகவல்கள்!

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு 7 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்க்கு எதிராக 20 ஆயிரம் ரூபா அபராதமும், அபராதம் செலுத்தவில்லை என்றால் மேலும் 6 மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் தனது கணவருடன் இணைந்து கருக்கலைப்பு நிலையம் ஒன்றை சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், மூன்று பிள்ளைகளின் தாயும் அவரது கணவரும் கருக்கலைப்பு செய்வதற்காக அந்நிலையத்திற்கு வருகை தந்த பெண் ஒருவரை கருக்கலைப்பு செய்யாமல் குழந்தையை பெற்றெடுத்து பணத்திற்கு விற்பனை செய்ய தூண்டியுள்ளனர்.

அந்த பெண், குழந்தையை பெற்றெடுத்த பின்னர் மூன்று பிள்ளைகளின் தாய், பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்க்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை அனைத்தும் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 7 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் முழு மனித இனத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு மனிதாபிமானமற்ற செயல் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.