தோற்றாலும் கம்பீரமாக நிற்கும் குணசேகரன்

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தோற்றுப்போய் இருந்தாலும் கரம்பீரமாக பேசி வீட்டு பெண்களை மீண்டும் திணற வைத்துள்ளார்.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

மீண்டும் மிரட்டும் குணசேகரன்
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

தர்ஷினிக்கும், சித்தார்த்திற்கும் திருமணம் செய்து வைப்பதற்கு குணசேகரன் திட்டம் போட்ட நிலையில், வீட்டு பெண்கள் அனைவரும் அதனை தவிடுபொடியாக்கியுள்ளனர்.

குணசேகரன் என்னதான் தோற்றுப் போய் நின்றாலும் தனது தோரணையை விடாமல் இருக்கின்றார். இதனை புரிந்து கொள்ள முடியாமல் வீட்டில் உள்ள பெண்களும் திகைத்து நிற்கின்றனர்.

 

மாளவிகா மோகனனுக்கு திருமணம் எப்போது தெரியுமா?.

மாளவிகா மோகனன்
மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்னர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடிக்கிறார்.

திருமணமா?
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், சமீபத்தில் ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனன் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், என்னை திருமண கோலத்தில் பார்க்க ஏன் உங்களுக்கு இவ்ளோ ஆர்வம்? என்று தெரிவித்துள்ளார்.

கவுண்டமணியிடம் பாராட்டை பெற்ற சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
மக்கள் இப்போதெல்லாம் சீரியல்களில் எப்போதும் குட் அன் பேட் கதாபாத்திரங்களை பார்த்து சலித்துவிட்டார்கள்.

மிகவும் எதார்த்தமாக அழகிய குடும்ப கதையுள்ள கதைகளை தான் அதிகம் ரசிக்கிறார்கள். அப்படி மக்கள் கொண்டாடும் விதமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை.

அண்ணாமலை என்பவர் தனது 3 மகன்கள், மருமகள்களுடன் ஒன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை உடையவர், ஆனால் அவரின் ஆசையை கெடுக்கும் வகையில் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் எப்படியோ பிரச்சனைகள் முடிந்து ஒன்றாக இணைந்துவிடுகிறார்கள்.

இப்போது கதையில் ரோஹினி-மனோஜ் இருவரும் பணத்தை பற்றி தங்களது குடும்பத்தில் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள், அது எப்போது வெளியே தெரியும் என தெரியவில்லை.

கவுண்டமணி
இந்த தொடரில் முத்துவின் நண்பனாக செல்வம் கதாபாத்திரத்தில் நடிப்பவர் பழனியப்பா. இவர் கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடிக்கிறார்.

நீண்ட டயலாக் ஒன்றை எளிதாக பேசி அனைவரையுமே ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

அவரின் நடிப்பை பார்த்து வியந்த கவுண்டமணி அவரை பாராட்டியுள்ளார். அதோடு நீ பெரிய நடிகராக வருவாய் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருக்கிறாராம்.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்

சிறகடிக்க ஆசை
எதார்த்தமான கதைக்களத்தோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப கதை தான் சிறகடிக்க ஆசை.

முத்து-மீனா இவர்கள் தான் கதையின் முக்கிய கரு, இவர்களை சுற்றிய கதையாக தான் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பாகிறது.

ஜீவாவிடம் இருந்து பணத்தை பெற்ற மனோஜ்-ரோஹினி வீட்டில் பொய் சொல்லி தப்பிக்கிறார்கள், ஆனால் முத்துவிற்கு மட்டும் ஒரு சந்தேகம் உள்ளது.

இதில் வேறு ஜீவாவிற்காக சாட்டி கையெழுத்து எல்லாம் போட்டுள்ளார், இதனை வைத்து முத்துவிடம், மனோஜ்-ரோஹினி சிக்கினாலும் உண்டு. எப்படி கதையை கொண்டு செல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

புதிய வாய்ப்பு
இந்த தொடரில் ரோஹினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் சல்மா. இன்ஸ்டாவை திறந்தாலே மக்கள் திட்டுகிறார்கள், இதனால் கமெண்ட் பிளாக் செய்து வைத்துள்ளேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது இவர் குறித்து என்ன தகவல் என்றால் இவருக்கு சன் டிவியில் முக்கிய சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

அதில் நெகட்டீவ் கதாபாத்திரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மற்றபடி தொடர் பற்றிய விவரத்தை அவர் கூறவில்லை, ஆனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

சன் டிவி ரசிகர்களுக்கு அடுத்த ஷாக் முடிவுக்கு வரும் சீரியல்

டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

இந்த வாரத்தோடு சன் டிவியின் அன்பே வா சீரியல் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இன்னொரு சீரியலும் முடிவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரியமான தோழி
சன் டிவியில் கிட்டத்தட்ட 600 எபிசோடுகள் நெருங்கி வரும் பிரியமான தோழி சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறதாம்.

இந்த தகவல் அந்த தொடரின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

தோற்றுப்போன குணசேகரன்! ஜீவானந்தத்துடன் எஸ்கேப் ஆகிய தர்ஷினி

எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி மணக்கோலத்தில் மண்டபத்தில் அமர்ந்துள்ள நிலையில், ஜனனி டீம் மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

மணக்கோலத்தில் குணசேகரன்
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

தர்ஷினிக்கும், சித்தார்த்திற்கும் திருமணம் செய்து வைப்பதற்கு குணசேகரன் திட்டம் போட்ட நிலையில், வீட்டு பெண்கள் அனைவரும் அதனை தவிடுபொடியாக்கியுள்ளனர்.

சொல்லப்போனால் இந்த அருமையான காட்சியை தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். வீட்டு பெண்களால் குணசேகரன் முதன்முதலாக தோல்வியை சந்தித்துள்ள நிலையில் திருமணம் நின்று போயுள்ளது.

தர்ஷினி ஜீவானந்தத்திடம் சேர்ந்துள்ள நிலையில், போட்டிக்கும் தயாராகி உள்ளார். ஒருவழியாக வீட்டு பெண்கள் தாங்கள் நினைத்தது போன்று தர்ஷினியையும் காப்பாற்றியுள்ளனர்.

 

கனடாவில் சூரிய கிரகணத்தினால் எற்பட்ட பாதிப்பு

கனடாவில் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்த்தவர்களுக்கு கண் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் இந்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

சூரிய கிரகணம் காரணமாக கண் பாதிப்புக்களை எதிர்நோக்கிய 160 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 8ம் திகதி கனடாவில் சூரிய கிரகணம் தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலருக்கு நிரந்தர பார்வைக் குறைபாடு ஏற்படக்கூடிய அளவிற்கு பாதிப்புக்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அநேக பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட போது மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளில் அதனை பார்வையிட்டுள்ளனர்.

இதனால் ஆபத்துக்கள் குறைவாக பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சில இடங்களில் சூரிய கிரணத்தை சிலர் பாதுகாப்பற்ற வழிமுறைகளை பயன்படுத்தியதனால் கண் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

CHALLENGERS: திரை விமர்சனம்

ஹாலிவுட்டின் கனவுக்கன்னி ஸென்டயாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில், டென்னிஸ் விளையாட்டை மையப்படுத்தி வெளியாகியுள்ள ‘சேலஞ்சர்ஸ்’ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காண்போம்.

கதைக்களம்
2019ஆம் ஆண்டில் சேலஞ்சர்ஸ் எனும் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் படம் தொடங்குகிறது. ஆர்ட் டொனல்ட்ஸன் (மைக் ஃபைஸ்ட்), பேட்ரிக் ஸ்வெய்க் (ஜோஷ் ஓ கானர்) ஆகிய இருவரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதே படத்தின் முழுக்கதை.

டொனால்ட்ஸன், பேட்ரிக் இரண்டு நெருங்கி நண்பர்களும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் எதிர்முனையில் உள்ளனர். அவர்களில் கதாநாயகி டஷி டன்கனின் (ஸென்டயா) ஆதரவு யாருக்கு என்பது ஒருபுறம், கதாநாயகர்களின் பிளேஷ்பேக் என்ன என்பது மறுபுறம் என Non-Linear திரைக்கதையில் மிரட்டியிருக்கிறார் இயக்குநர்.

முக்கோணக்காதல் கதைப் போல படத்தின் திரைக்கதை விரிய, அதற்குள் இருக்கும் சிக்கல்கள் குறித்து படம் பேசுகிறது. இறுதியில் வெற்றியாளர் யார் என்பதே கிளைமேக்ஸ் சஸ்பென்ஸ்.

படம் பற்றிய அலசல்
டென்னிஸ் வீராங்கனையான டஷியை ஒரு போட்டியில் சந்திக்கும் நண்பர்களான பேட்ரிக், டொனால்ட்சன் இருவரும் அவரை இம்ப்ரெஸ் செய்ய முயலும் காட்சியில் அலப்பறை ஆரம்பமாகிறது.

டீனேஜ் குறும்புத்தனத்துடன் மூவரும் அறையில் பேசிக்கொள்ளும் மற்றும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி இறுதியில் காமெடியாக முடிவது திரையரங்கில் சிரிப்பலை.

டென்னிஸ் விளையாட்டில் உள்ள நுணுக்கங்களை, மனிதர்களின் மனச்சிக்கல்களுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை மிரட்டல்.

ஒவ்வொரு போட்டியை காட்சிப்படுத்திய விதத்தில் ஒளிப்பதிவாளர் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார். வீரர்கள் அடிக்கும் பந்து நம்மை தாக்க வருவதுபோல் 3D எஃப்பெக்ட் உடன் 2Dயிலேயே மிரட்டியிருக்கிறார்கள்.

தொய்வில்லாத திரைக்கதையுடன் ஒன்ற வைக்க ட்ரெண்ட், அட்டிகஸ் இசை உதவியுள்ளது. என்னதான் non-linear திரைக்கதையை சிறப்பாக கையாண்டிருந்தாலும், அனைத்து தரப்பு பார்வையாளர்களாலும் படத்துடன் ஒன்ற முடியுமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Call Me by Your Name எனும் ஆஸ்கர் விருது வென்ற படத்தை இயக்கிய Luca Guadagnino தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். படத்தில் வரும் மூன்று கதாபாத்திரங்களும் (ஹீரோ, ஹீரோயின்) சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

adult காட்சிகள், வசனங்கள் அதிகம் இடம்பெற்றிருப்பதுடன் 18+ படம் என்பதால் இது குழந்தைகளுக்கான படம் அல்ல. வயது வந்தோர் வாய்விட்டு சிரித்து, முழு டென்னிஸ் போட்டியை சுவாரஸ்சியமாக கண்டுகளிக்க கட்டாயம் இப்படத்தை பார்க்கலாம்.

க்ளாப்ஸ்

நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு

டென்னிஸை காட்சிப்படுத்திய விதம்

திரைக்கதை மற்றும் இசை

பல்ப்ஸ்

பெரிதாக ஒன்றும் இல்லை

மொத்தத்தில் காதல், நட்பு இரண்டையும் கலந்து டென்னிஸ் விளையாட்டுடன் சேர்த்து புதுமை செய்திருக்கிறது இந்த சேலஞ்சர்ஸ். முழுக்க முழுக்க இளைஞர்களை குறிவைத்து எடுத்து ஜெயித்திருக்கிறார் தயாரிப்பாளர், நடிகை ஸென்டயா

நடிகை சாந்தினி ஷார்ட் உடையில் கிளாமர் போட்டோஷூட்

நடிகை சாந்தினி தமிழரசன் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

அவர் தற்போது ஷார்ட் உடையில் கிளாமர் போஸ் கொடுத்திருக்கும் புகைபடங்களை இதோ.


முதல் நாள் ரத்னம் திரைப்படம் செய்த வசூல்

ரத்னம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் ரத்னம். கமர்ஷியல் கிங் என தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வசூல் விவரம்
இதுவரை ஹரி – விஷால் கூட்டணியில் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்கள் வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே வரவேற்பை ரத்னம் படம் பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில், ரத்னம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் வெளிவந்த முதல் நாளில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

நடிகர் விஜய்யின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா?

நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து தளபதி 69 உருவாகவுள்ளது. ஹெச். வினோத் இப்படத்தை இயக்குகிறார் என கூறப்படும் நிலையில், கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை எதற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

விஜய்யின் மாமனார், மாமியார்
விஜய்க்கு கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் சூழ், விஜய் – சங்கீதாவின் திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளதை அறிவோம்.

இந்த நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதாவின் தாய், தந்தை அதாவது விஜய்யின் மாமனார் மற்றும் மாமியாரை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுடைய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

கில்லி படத்தை தொடர்ந்துரீ ரிலீசுக்கு தயராகும் விஜயின் மற்றுமோர் படம்!

கில்லி படம்
முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆவது வழக்கமான ஒரு விஷயமாகிவிட்டது.

அப்படி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் விஜய்யின் கில்லி.

தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிக்க 2004ம் ஆண்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் இப்போது வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

ரிலீஸ் ஆன நேரத்திலேயே முதல் ரூ. 50 கோடி வசூலித்த படம் என்ற சாதனையை பெற்றது.

மற்றொரு படம்
விஜய்யின் கில்லி படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் நிலையில் இப்போது தளபதி ரசிகர்களுக்காக இன்னொரு சூப்பர் சந்தோஷ செய்தி வெளியாகியுள்ளது.

கில்லி படம் வெளியாகி இதுவரை ரூ. 17 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் விஜய்யின் இன்னொரு படம் ரீரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

வேறு எந்த படமும் விஜய்-ஜோதிகா நடிப்பில் வெளியாகி நல்ல ஹிட்டடித்த குஷி படம் தான் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சமுத்திரக்கனி
தமிழ் சினிமாவில் முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதே போல் நடிப்பிலும் மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தையே பிடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவித்து வருகின்றன. கடைசியாக இவர் தெலுங்கில் நடித்திருந்த ஹனுமன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு
இந்த நிலையில், திரையுலகில் முக்கிய நபராக விளங்கி வரும் சமுத்திரக்கனியின் சொத்து விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சமுத்திரக்கனி ஒரு படத்திற்கு ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

ஸ்கார்பியோ – ரூ. 21 லட்சம், Audi A4 – ரூ. 45 முதல் ரூ. 53 லட்சம், BMW X3 – ரூ. 68 முதல் ரூ. 72 லட்சம் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார். இவருடைய வீட்டின் மதிப்பு சில கோடிகள் வரும் என்கின்றனர். மேலும், இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 20 கோடி முதல் ரூ. 25 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையானது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்னம் திரை விமர்சனம்

இயக்குனர் ஹரி கமர்ஷியல் படங்களின் கிங் என்று அழைக்கப்படுபவர். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் இருக்கும், அந்த வகையில் விஷாலுடன் தாமிரபரணி, பூஜை தொடர்ந்து ஹாட்ரிக் அடித்தார ரத்னம் மூலம், பார்ப்போம்.

கதைக்களம்
ஆந்திரா-தமிழ்நாடு பார்டரில் மிகப்பெரும் கொள்ளையுடன் படம் தொடங்குகிறது, அதை தொடர்ந்து வேலூரில் விஷால் எம் எல் ஏ சமுத்திரக்கனி அடியாளாக போலிஸ் தட்டிகேட்க வேண்டிய அநியாயங்களை தனி ஆளாக தட்டி கேட்கிறார்.

அப்போது ஒரு நாள் வேலூரில் ப்ரியா பவானி ஷங்கரை பார்க்க, அவர் இங்கு நீட் எக்ஸாக் எழுத வருகிறார். ஆனால், வந்த இடத்தில் ப்ரியா பவானி ஷங்கரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொல்ல வருகிறது.

இதை அறிந்த விஷால் அவருக்கு பாதுக்காப்பு கொடுக்க, பிறகு தான் தெரிகிறது, ஒரு நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் தேடி வர, இந்த பிரச்சனை விஷால் கைக்கு வருகிறது, பிறகு என்ன விஷால் நிலத்தை மீட்டு ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
ஹரி படத்திற்கு என்றே அளவு எடுத்த செஞ்ச பீஸ் போல் இருக்கிறார் விஷால். ஆறடி உயரம், 50 பேரை தூக்கி போட்டு அடித்தால் கூட நம்பும் லாஜிக் என படம் முழுவதும் ஆக்‌ஷன் அதகளம் செய்துள்ளார்.

ஆனால், மார்க் ஆண்டனி பாதிப்பு இன்னமுமே உள்ளது, இரண்டிலுமே அம்மாவை நினைத்து ஏங்கும் கதாபாத்திரம் விஷாலுக்கு , என்ன அதில் காமெடி, இதில் சீரிஸ், அது ஒரு கட்டத்தில் விஷால் சீரிஸாக பேசினாலும் மார்க் ஆண்டனி போல தெரிகிறது.

ப்ரியா பவானி ஷங்கர் விஷால் அம்மா போலவே உள்ளதாள் அவரை காப்பாற்ற போராடும் கதை என்றாலும் அதில் பல பேஸ் ஸ்டோரிகளை வைத்து ஹரி தனக்கே உரிய ஸ்டைலில் விறுவிறுவென எடுக்க முயற்சி எடுத்துள்ளார்.

வெறும் ஹீரோயின் ஆக மட்டும் கத்தி எடுக்காமல் விஷாலுக்கு என்று வைத்த பேக் ஸ்டோரி, விஷாலுக்கும் வில்லனுக்கும் என்ன சம்மந்தம் என ஒவ்வொன்றாக காட்டிய விதம், ஹரி இன்றும் கமர்ஷியலில் புதிதாக செய்ய முயற்சிக்கிறார் என்பதை காட்டுகிறது.

இடைவேளை சேஸிங் காட்சி பரபரப்பையும், டெக்னிக்கலாக சூப்பராகவும் உள்ளது. மற்றப்படி வில்லனை ஊர் விட்டு ஊர் போய் கொல்லும் ஹரியின் டெம்ப்ளேட் காட்சிகள் அவர் படத்திலே பார்த்த நியாபகத்தை ஏற்படுத்துகிறது.

ஒரே ஊரில் தான் விஷால் அம்மா குடும்பம் உள்ளது ப்ரியா பவானி குடும்பமும் உள்ளது, அவர்களுக்கு தெரியாத உருவ ஒற்றுமை விஷாலுக்கு மட்டுமே தெரிந்தது கொஞ்சம் லாஜிக் பார்த்துயிருக்கலாம் ஹரி சார்.

ஹரி படம் என்ன விறுவிறுப்பாக சென்றாலும், தொய்வு ஏற்படும் போது காமெடி பாடல்கள் துணை நிற்கும், இதில் ஹெவி மிஸ்ஸிங், வேலூர் என்பதால் வெயில் கொஞ்சம் ஓவர் தான், ஆனால், எதோ பாலைவானம் போல் காட்டியது ஏன் சார்.

க்ளாப்ஸ்

ஆக்‌ஷன் காட்சிகள்.

இடைவேளை சிங்கிள் ஷாட் சேஸிங்.

செண்டிமெண்ட் காட்சிகள்

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன காட்சிகள்.

மொத்தத்தில் ஹரி-விஷால் கூட்டணியில் குடும்பங்கள் ரசிக்கும் படமாக வந்துள்ளது ரத்னம். ஆனால், இது எந்த அளவிற்கு இளைஞர்களை கவரும் என தெரியவில்லை.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சேரனின் மூத்த மகள்!

சேரன்
கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சேரன்.

இவர் இயக்கிய ஆட்டோகிராப் , தவமாய் தவம் இருந்து போன்ற படங்களுக்கு இப்போதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

திருமணம்!
இந்நிலையில் சேரனின் மூத்த மகளான நிவேதா பிரியதர்ஷினிக்கு, சுரேஷ் ஆதித்யா என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமண விழாவில், சீமான், பாரதிராஜா, கே எஸ் ரவிக்குமார், சமுத்திரக்கனி, சிம்புதேவன், பாண்டிராஜ் எனப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதோ புகைப்படங்கள்..

மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா

மன்மதன்
சிம்பு நடிப்பில் இயக்குனர் முருகன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மன்மதன். இப்படத்தில் இரட்டை வேடத்தில் சிம்பு நடித்திருப்பார். மேலும் ஜோதிகா, கவுண்டமணி, சிந்து துலானி, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வரை சிம்பு ரசிகர்களுக்கு மனதை கவர்ந்த திரைப்படங்களில் மன்மதன் படமும் ஒன்று.

நடிகர் பாலகிருஷ்ணா
இப்படத்தில் சிந்து துலானியுடன் நெருக்கமான காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பாலகிருஷ்ணா. இந்த காட்சி நெட்டிசன்களால் மீம் மெட்டீரியலாகவும் மாறியது.

இந்த நிலையில், நடிகர் பாலகிருஷ்ணாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மன்மதன் படத்தில் நடித்த நடிகரா இது! ஆள் அடையாளமே தெரியவில்லையே என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

சமந்தாவுடன் விவாகரத்து.. புது காதலி உடன் சுற்றும் நாக சைதன்யா?

சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு அதன் பின் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

அவர்கள் பிரிவுக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றனர். நாக சைதன்யா அதன் பின் பிரபல நடிகை சோபிதா துளிபாலாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசு பரவ தொடங்கியது. அவர்கள் ஒன்றாக வெளியில் சுற்றுவதாகவும் கூறப்பட்டு வந்தது.

புது காதலி உடன்..
இந்நிலையில் இன்ஸ்டாக்ராமில் சோபிதா காட்டிற்கு சஃபாரி ட்ரிப் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதே போல நாக சைதன்யாவும் காட்டில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் ஒன்றாக தான் ட்ரிப் சென்றிருக்கிறார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர்கள் காதல் உறுதியாகி இருப்பதாகவும் மீண்டும் இணையத்தில் கிசுகிசு வர தொடங்கி இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sobhita (@sobhitad)

 

 

 

View this post on Instagram

 

A post shared by Chay Akkineni (@chayakkineni)

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா

கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

அட்லீ தயாரிப்பில் இந்தியில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகும். அதன்பின் அது வெறும் வதந்தி தான் என தெரியவரும். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

திருமணம்
அதன்படி, நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 13 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருகிறாராம். அவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், அவர் நகைக்கடை உரிமையாளரின் மகன் என்றும் கூறப்படுகிறது. இருவரும் 13 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், தற்போது திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இது உண்மையா அல்லது எப்போதும் போல் வதந்தியா என்று.

ரீ-ரிலீஸில் வசூலை வாரி குவிக்கும் விஜய்யின் கில்லி!

கில்லி
விஜய்யின் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் உருவான இப்படம் தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

ஆனால், திரைக்கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாக மாற்றியமைத்து மேஜிக் செய்தார் இயக்குனர் தரணி. அதுவே இப்படம் இன்று வரை நின்றுபேசக்கூட அளவிற்கு காரணமாக இருக்கிறது.

வசூல் சாதனை
20 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும் கில்லி திரைப்படம் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆனது. இதனை திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் சாதனை படைத்த கில்லி படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரீ-ரிலீஸில் கில்லி திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. புதிய படங்களுக்கு இடையான வசூலை ரீ-ரிலீஸ் ஆன திரைப்படம் செய்து வருகிறது என பலரும் கூறி வருகிறார்கள்.

சைக்கிளில் வந்தது பற்றி விஷால் கொடுத்த விளக்கம்

நடிகர் விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி அரசியல்கள் களமிறங்கி விட்டார். அதனை தொடர்ந்து விரைவில் தானும் அரசியலில் நுழைவேன் என அறிவித்தார் விஷால்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விஷால் சைக்கிளில் வாக்களிக்க வந்தார். முந்தைய தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்த நிலையில், அதை விஷால் அப்படியே காபி அடித்துவிட்டார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

விஷால் பதில்
இந்நிலையில் நடிகர் விஷால் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். ‘என்னிடம் வேறு வண்டி இல்லை. அப்பா, அம்மாவுக்கு ஒரு வண்டி இருக்கிறது. மற்றதை விற்றுவிட்டேன்.

இப்போது இருக்கும் ரோடு கண்டிஷனுக்கு வண்டி சஸ்பெண்க்ஷனை வருடத்திற்கு மூன்று முறை மாற்ற முடியாது.

என்னிடம் காசு இல்லை. அதனால் சைக்கிள் வாங்கினேன் என கூறி இருக்கிறார் விஷால்.