தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கார் மூலம் காஞ்சீபுரம் வழியாக ஆரணியில் நடைபெறும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றார்.
அதையொட்டி காஞ்சீபுரம் நகர எல்லையான பொன்னேரிக்கரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் வரவேற்றனர்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சரக்கு, சேவை வரியால் தமிழக வியாபாரிகளுக்கு ஏற்படும் குறைகள் மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டப்படும். வரியை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் ஆரணிக்கு புறப்பட்டு சென்றார்.







