தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஒற்­ றுமை மிகவும் அவ­சி­ய­மாகும் – சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு இந்­ தியா ஆலோ­சனை

வடக்கின் நிலை­யான அமை­திக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஒற்­ றுமை மிகவும் அவ­சி­ய­மாகும். ஒற்­று­மையை பாது­காத்துக் கொள்­ளுங்கள்.

தற்­போ­தைய நிலை­மையில் தனித்து கட்­சி­ய­மைத்து செயற்­பட முயற்­சிக்க வேண்டாம் என வட மாகாண முத­ல­ மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு இந்­ தியா ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக தக­வல்கள் கூறு­கின்­றன.

வடக்­கிற்­கான முத­லா­வது பய­ணத்தை  இந்­திய உயர்ஸ்­தா­னிகர் தரன்ஜித் சிங் சந்து கடந்த வியா­ழக்­கி­ழமை மேற் ­கொண்டார். இதன் போது முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன்  மற்றும் ஆளு நர் ரெஜினோல் குரே உள்­ளிட்ட வட மாகா­ணத்தின் மக்கள் பிர­தி­நி­தி­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இதன் போது வட மாகாண முத­ல­மைச்சர் சி. வி விக்­னேஸ்­வ­ரனை தனி­யாக சந்­தித்த உயர் ஸ்தானிகர் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்குள் பிள­வுகள் ஏற்­ப­டு­வதை இந்­தியா விரும்ப வில்லை என்ற விட­யத்தை உறு­தி­பட தெரி­வித்­துடன் ஒற்­று­மையை தொடர்ந்தும் பாது­காத்து கொள்­ளு­மாறும் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். மேலும் அனைத்து மக்கள் பிர­தி­நி­தி­க­ளையும் ஒரு மேடைக்கு அழைத்து இராப்­போ­சன விருந்­தி­னையும் வழங்­கி­யுள்ளார்.

வட மாகாண சபை அமைச்­சர்கள் சிலரின் ஊழல் குற்­றச்­சாட்டு விசா­ரணை அறிக்­கையின் பின்னர் கூட்­ட­மைப்­பிற்குள் இரு தரப்பு மோதல்கள் தீவி­ர­ம­டைந்­தன. இதன் விளை­வாக முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையும் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இறுதி நேரத்தில் மோதல்கள் சம­ரசம் அடைந்­தன. ஆனால் இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் பனிப்போர் தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

மறு­ப­டியும் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை வலு­வாக முன் வைப்பது தொடர்பிலும் பேச்சுக்கள் இடம்பெறுவதாகக் கருதப்படுகின்றது. இவ்வாறான மோதல்கள் கட்சியை பிளவுபடுத்துவதாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.