பட்டப்பகலில் செயின் பறிப்பு

சென்னை முகப்பேரு பகுதியை சேர்ந்த சுமதித்ரா என்ற பெண் நேற்று அய்யப்பாக்கம் சாலையில் தனது மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த இரண்டு திருடர்கள் சுமத்திராவின் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்துச் சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் இந்த வழிப்பறிச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை ஜெ ஜெ நகர் போலிசார் வழக்கு பதிவு செய்து குற்வாளிகளை தேடி வருகின்றனர். பொதுமக்கள் இவர்களை அடையாளம் கண்டால் ஜெ ஜெ நகர் காவல் துறைக்கு தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.