அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் பலமுறை வலியுறுத்திய பிறகே சட்டசபை கூட்டப்பட்டுள்ளது.
மானியக்கோரிக்கைகளை விவாதிக்க இப்போதாவது சட்டசபையை கூட்டியிருக்கிறார்களே என்பது மகிழ்ச்சி.
மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில், அதிமுகவில் பிரச்சினை அதிகரித்துள்ளது.
இதையெல்லாம் பார்க்கும் போது மானியக்கோரிக்கை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்ட போதே சட்டசபையைக் கூட்டியிருக்க வேண்டும் நாங்கள் வலியுறுத்திய பின்னரே கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக எப்போதுமே மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் என்றும் இந்த அரசு விரைவில் கவிழும் விரைவில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.