மண் சரிவுகளின் காரணமாக பாதிப்புக்களானவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்று பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
பல்வேறு அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் கூறியது தேசிய அனர்த்தத்தின் போது அனைத்து பேதங்களையும் துறந்து செயற்பட வேண்டும் என்றேயாகும்.
அவ்வாறிருந்தாலும் அவைகளுக்கிடையே பல்வேறு பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு அரசாங்கத்தை செல்வாக்கிழக்கச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்றன என்பதையும் மறந்து விட முடியாது.
மின் உற்பத்தி நீர்த்தேக்கங்களில் ஒரேயடியாக நீரை திறந்து விடப்பட்டுள்ளதாகவும், நில்வள கங்கையின் அணை உடைந்து போயுள்ளதாகவும் என இங்கு கூறப்படாத பொய்யான பிரசாரங்கள் இணையத்தளங்களிலும், வாய்களாலும் வேறு வழிகளாலும் பரப்பப்பட்டன.
சில நேரங்களில் நிலைமையினை மிகவும் மோசமானதாக ஆக்கிக் காட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியைக் காண முடிந்தது. பாராளுமன்றமும் மூழ்கிவிட்டது என்பது அவ்வாறான ஒரு பிரசாரமாகும்.
இதனால் அதனை அண்மித்த பிரதேசங்களில் வாழும் மக்களும், தூர பிரதேசங்களில் வாழும் மக்களும் கலவரமடைந்து போயிருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது.
இவ்வாறான பிரசாரங்கள் எவ்வாறான நோக்கங்களுக்காகச் செய்யப்பட்டாலும் அவற்றின் தாக்கங்கள் படு மோசமானது என்பதைக் கூறிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான பொய் பிரசாரங்கள் செல்லும் போது மக்களுக்கு உண்மையான எச்சரிக்கைகள் செய்யப்பட்டாலும் அவற்றைக் கணக்கெடுக்காத நிலை ஏற்படலாம். அப்போது உயிரிழப்புக்களும், செத்திழப்புக்களுமே ஏற்படும்.
இந்த சந்தர்ப்பத்தில் அழிவுகள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்தது வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்த எச்சரிக்கைகள் அந்தளவுக்கு கணக்கில் எடுக்கப்படாததேயாகும்.
மற்றொரு தரப்பினர் முயற்சித்துக் கொண்டிருப்பது இந்த அனர்த்தங்கள் மனிதர்களினால் ஏற்படுத்தப்பட்டது என்பதைக் கூறுவதற்கேயாகும். அதாவது அபிவிருத்திப் பணிகளைக் காரணம் கூறுவதற்காகவேயாகும்.
அபிவிருத்திப் பணிகளிலும் கூட சில தவறுகளினாலும் மக்கள் பெருக்கம் அதிகரித்தமையும் ஏற்பட்ட பாதிப்புக்களின் அளவு அதிகரித்திருக்கலாம். அவ்வாறிருந்தாலும் இவை அபிவிருத்திப் பணிகளின் காரணமாகவே ஏற்பட்ட பாதிப்புக்கள் எனக் கூறுவது தீவிரவாதக் கருத்தாகும்.
இவ்வாறான பேரழிவுகள் முன்னைய காலங்களில் ஏராளமாக இடம்பெற்றமைக்கான தகவல்கள் உள்ளன. 1957ம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் அநுராதபுர நகரம் மூழ்கிய விதத்தினை அங்கு சிங்க கோபுரத்திற்கு அருகிலுள்ள சுவர் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள நீர் மட்டத்திலிருந்து கண்டு கொள்ள முடியும்.
அது நாட்டின் அனேகமான பிரதேசங்களைப் பாதிப்புக்குள்ளாக்கிய வெள்ளப் பெருக்காகும். அக்காலத்தில் இந்தளவுக்கு சர்ச்சைகள் இடம்பெறாமைக்கான காரணம் இதற்கான தொடர்பாடல் வழிகள் இல்லாதிருந்தமையாக இருக்கலாம்.
இன்றிருக்கும் சுதந்திர ஊடகங்கள் அன்றிருக்கவில்லை. இருந்தது அரசாங்க வானொலியும், சில பத்திரிகைகளும் மாத்திரமேயாகும். கிராமப்புற மக்களிடம் வானொலிப் பெட்டிகள் இருக்கவில்லை. பத்திரிகைகளை வாசிக்குமளவு எழுத்தறிவும் இருந்திருக்கவில்லை.
இன்றையதைப் போன்ற விரிவான அரசாங்க இயந்திரம் அன்றிருக்கவில்லை. கிராமங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கும் வழிகளும் வரையறுக்கப்பட்டதாகவே இருந்தது.
தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்துவதற்கும் பல மணிநேரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த வசதிகளும் கூட இருந்தது பிரதான நகரங்களில் மாத்திரமேயாகும்.
அந்தக் காலத்திற்கும் அப்பால் சென்றால் நிலைமை இன்னும் மோசமானதாகும். இரத்தினபுரி மாவட்டத்தின் இழும்பகந்த கிராமத்திற்கு கட்டுரையாளர் சென்ற போது அந்த முழுக்கிராமமும் நூறு வருடங்களுக்கு முன்னராக சந்தர்ப்பம் ஒன்றில் மண்சரிவுக்கு உட்பட்டுள்ளதைக் காணக் கிடைத்தது.
அப்போது அக்கிராமத்தில் எஞ்சியது ஒரேயொரு குடும்பம் மாத்திரமேயாகும். அவர்கள் தப்பியதற்கான காரணம் அவர்கள் திருமண நிகழ்வொன்றிற்காகச் சென்றிருந்ததாலாகும்.
மண்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை தேடி எடுப்பதற்கு இன்றையதைப் போன்று முப்படைகளோ அல்லது வலுவான அரச சேவையோ அன்றிருக்கவில்லை என்பது தெளிவான விடயம்.
அக்காலத்தில் இவ்வாறான மண்சரிவுகள் ஆரவாரமின்றி இடம்பெற்றிருக்கலாம். அவைகளின் தகவல்கள் சிறிதளவிலேயே உள்ளன.
எமது நாட்டில் 14 வருடங்கள் நிலவியதாகக் கூறப்படும் ‘பெமினிட்டியா ஓரங்கள்’ என்ற பஞ்சம் இருந்தது பலகம்பா அரசரின் காலத்திலாகும்.
அந்தக் காலத்தில் இந்த அபிவிருத்திகள் இருக்கவில்லை என்பதையும், புவி வெப்பமடைதலுக்கு காரணமான வாயுக்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதையும், காடுகள் அழிக்கப்பட்டதும் பாராதூரமானதல்ல என்பதையும் புதிதாகக் கூற வேண்டியதில்லை.
ஏழு நாட்கள் நீடிக்கும் முருகசன் மழையினால் உலகம் சேதங்களுக்கு உள்ளாகும் என கதையொன்று உள்ளது. இதன் அர்த்தம் உலகிற்கு பாரிய அழிவை ஏற்படுத்தும் மழை தொடர்பில் மக்களுக்கு அனுபவம் இருந்துள்ளது என்பதேயாகும்.
அவ்வாறான மழை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நீடித்தால் உலகம் பாரிய அழிவை சந்திக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதற்கான காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
பல்வேறு காலங்களில் ஏற்பட்ட பஞ்ச நிலைகள் தொடர்பான தகவல்கள் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மனிதச் செயற்பாடுகளினால் ஏற்பட்டது என்பதை புதிதாகக் கூற வேண்டியதில்லை.
உலகில் உயிரினங்கள் தோன்றியதன் பின்னர் பல்வேறு காலங்களில் அதிக வெப்ப காலம், குளிர் காலங்கள் தோன்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவற்றிற்கு பல்வேறு காரணங்கள் இருக்க முடியும்.
டைனோசர்கள் அழிந்து போவதற்கும் இதுவே காரணம் என்றும் கூறப்படுகின்றது. இவைகள் மனிதச் செயற்பாடுகளின் காரணமாக இடம்பெறாமைக்கான காரணம் அப்போது மனிதன் பூமியில் தோன்றியிருக்காமையேயாகும்.
புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் வரட்சி, மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, நில நடுக்கம், சுனாமி போன்ற அனைத்துமே இயற்கை நிகழ்வுகள்தான் என்பதேயாகும்.
இவற்றை நிறுத்துவதற்கு மனிதனால் முடியாது. அல்லது இவைகளை நிறுத்துமளவுக்கு மனிதன் இன்னமும் முன்னேறவில்லை. எவ்வாறாயினும் அனர்த்தங்களின் தாக்கம் கூடி குறைவதற்கு மனிதச் செயற்பாடுகள் காரணமாக இருக்க முடியும்.
இது தொடர்பில் கவனம் செலுத்துவதும் இவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ளுவதும் முக்கியமானதாகும்.தாழ்ந்த நிலங்களை நிரப்புதல், நீர் வடிந்தோடக்கூடிய வழிகளில் தடைகளை ஏற்படுத்துதல் போன்றன வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் கடந்த காலங்களில் கண்மூடித்தனமாக வகையில் இடம்பெற்றன. அனேகமாக இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. காரணம் இவ்வாறான செயற்பாடுகள் அரசியல் பலத்தின் அனுசரணையில் இடம்பெற்றதாகும்.
சில வேளை அரசியல்வாதிகளின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாகவும் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றுள்ளன.எவ்வாறாயினும் சில மனித செயற்பாடுகளின் காரணமாக வெள்ளப்பெருக்கின் சேதங்கள் குறைந்துள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மலையிலிருந்து வரும் நீரோடைகளின் குறுக்காக அணைகளை கட்டி நீர்த்தேக்கங்களை அமைத்தமை அவ்வாறான ஒன்றாகும்.
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், நீர்ப்பாசனத்திற்காகவும் நிர்மாணிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கங்களின் மூலம் கடும் மழையினால் நீர் ஒரேயடியாக கீழ் நோக்கிப் பாய்வது தடுக்கப்பட்டு தாமதம் ஏற்படுத்தப்படுகின்றது.
இதனால் போதியளவு நீர் தேக்கி வைக்கப்படுகின்றது. இவ்வாறான மனிதச் செயற்பாடுகளின் காரணமாக வெள்ளப்பெருக்கின் சேதங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
ஜின் கங்கை திட்டத்தை நடைமுறைப்படுத்திய காலத்தில் அந்தப் பிரதேசத்திற்குச் சென்ற இந்த கட்டுரையாளருக்கு காண முடிந்த விடயம் எல்லா வீடுகளிலும் வள்ளம் ஒன்று இருந்ததேயாகும்.
இது ஜின் கங்கையில் வள்ளம் ஓட்டுவதற்கல்ல. அடிக்கடி ஏற்படும் வெள்ள அனர்த்தத்தின் போது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்வதற்காகும்.
ஜின் கங்கi திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.71ம் ஆண்டு கழக சமயத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரால் நாடு முழுவதிலும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் ஒன்றின் கோஷமாக இருந்தது புரட்சியினால் மாத்திரமே வெள்ளத்தையும், வரட்சியையும் இல்லாமலாக்க முடியும்’ என்பதாகும்.
இதன் அர்த்தம் வெள்ளமும், வரட்சியும் அந்தக் காலத்திலும் கூட மக்களின் பிரதான பிரச்சினையாக இருந்துள்ளது என்பதேயாகும். வரட்சிக்கு முகங்கொடுப்பதற்கு மஹாவலி திட்டமும், வெள்ள கட்டுப்பாட்டுக்கு ஜின் கங்கை திட்டமும் இன்னும் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்ட கால்வாய்களும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக மேற்கொள்ளப்பட்ட நிர்மாணங்களாகும்.
இவற்றினால் இவ்வாறான அனர்த்தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தாலும் அவற்றை தடுத்தி நிறுத்தி விட முடியவில்லை. புரட்சியினாலும் இதனைச் செய்ய முடியாது என்பதே எம்மால் விளங்கிக் கொள்ள முடிந்த விடயமாகும்.
எனவே கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்றன மனிதச் செயற்பாடுகளின் காரணமாக இடம்பெற்றது எனக் காட்டுவதும், இவை அனைத்திற்கும் காரணம் அபிவிருத்திச் செயற்பாடுகளே எனக்காட்டி அபிவிருத்திக்கு எதிரான கருத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முனைவது மோசமான தவறாகும்.
இவை எவராலும் தடுக்க முடியாத இயற்கை அனர்த்தங்கள் என்பதோடு, செய்ய வேண்டியது அவற்றின் சேதங்களைக் குறைத்துக் கொள்வதற்கான முறையில் செயற்படுவதும், உரிய கவனத்துடன் முகங்கொடுத்து தாக்கங்களைக் குறைத்துக் கொள்வது மாத்திரமேயாகும்.
எவ்வாறாயினும் அப்விருத்திகளுக்கு என்று மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக தாக்கங்கள் அதிகரித்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
சுற்றாடல் காரணிகளைக் கவனத்தில் எடுக்காது மேற்கொள்ளப்படும் அரசியல் தீர்மானங்களால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களேயாகும்.
இந்த அனர்த்தத்தோடு அனேகமான சுற்றாடலியலாளர்கள் சுட்டிக்காட்டிய விடயம் என்னவெனில், தக்ஷிண அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டபோது அப்போதிருந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் எடுத்த தவறான முடிவுகளின் தொடர்பிலேயாகும்.
இது ஆரம்பத்தில் மேம்பாலம் என்று திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. அதாவது தூண்களின் மேல் அமைக்கும் வீதி என்றேயாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் இதனை நிலத்தின் மேலான வீதியாக அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழக்கைக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் சுற்றாடல் தாக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தற்போது இடம்பெற்றிருப்பது ஈரலிப்பு வலயத்தின் பாரிய பிரதேசத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டத்தினால் நீர் வழிந்தோடுவது தடுக்கப்பட்டுள்ளது.
மலைகளிலிருந்து பாய்ந்து வரும் நீர் இவ்வாறு தடுக்கப்படும் போது அந்த பிரதேசம் நீரில் மூழ்குவது எதிர்பார்க்கக் கூடிய நிலையாகும்.சுற்றாடலியலாளர்கள் இது பற்றி சுட்டிக் காட்டியிருந்த போதிலும் அவற்றை உதாசீனம் செய்துவிட்டு இவை முன்னெடுக்கப்பட்டிருப்பின் அது குற்றமாகும்.
அதேபோன்று உரிய சுற்றாடல் மதிப்பீடுகளின்றி இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பின் அது மிகவும் கடுமையான குற்றமாகும். பொறுப்பற்ற செயலாகும். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் சுற்றாடல் காரணிகளைப் பொருட்படுத்தாது செயற்பட்ட முறையினைக் காட்டும் மற்றொரு காரணியாக இருப்பது மத்தளை விமான நிலையமாகும்.
அந்தப் பிரதேசம் பறவைகளின் சரணாலயமாக இருப்பதால் அது பறவைகளுக்கும், விமானங்களுக்கும் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன என சுற்றாடலியலாளர்கள் சுட்டிக் காட்டியிருந்துள்ளார்கள்.
அவ்வாறிருக்கையில் சுற்றாடலியலாளர்களின் ஆலோசனைகளை சற்றேனும் மதிக்காது அந்த இடத்திலேயே விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் இடம்பெற்றிருப்பது இருந்துட்டு இருந்து விமானங்கள் இறங்கும் இந்த விமான நிலையத்தில் இதுவரையில் பல விமானங்கள் விபத்துக்களுக்கு உள்ளாகியிருப்பதேயாகும்.
அதே போன்று மயில்களை விரட்டுவதற்கும் விஷேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நேர்ந்துள்ளது. இது அந்த விமான நிலையத்தின் முன் அபிவிருத்திப் பணிகளுக்கும் பிரச்சினையாகும். தன்னிச்சையான தீர்மானங்களின் முடிவுகள் இவ்வாறானவையே.
சுற்றாடலுக்கு நேரடியாகவே தொடர்பில்லாவிட்டாலும் ராஜபக்ச ஆட்சியின் தன்னிச்சையான போக்கினைக் காட்டும் நிகழ்வொன்று அண்மையில் கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது.
அதாவது ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பல்கலைக்கழக பீடம் ஒன்றை நிர்மாணிக்க இருந்த இடத்தில் பல்கலைக்கழக பீடம் இல்லாமல் மாணவர் விடுதி ஒன்றை நிர்மாணித்ததேயாகும்.
அங்கு நிர்மாணிக்கப்படவிருந்தது கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஒரு பீடமேயாககும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனை நிர்மாணிப்பதற்கு எதுவும் செய்யப்படவில்லை. என்றாலும் 22 கோடி ரூபாய் செலவில் 100 மாணவர்களுக்கான மாணவர் விடுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இது உயர் அரசியல் முக்கியஸ்தரின் தேவையின் நிமித்தம் நிர்மாணிக்கப்பட்டதால் இது தொடர்பில் யாரும் பேசவில்லை.இவற்றிலிருந்து புரியும் விடயம் என்னவெனில் சுற்றாடலையோ, மனித வாழ்வையோ, தேவைகளையோ பொருட்படுத்தாது இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பது அபிவிருத்திக்காக அல்லாமல் வேறு தேவைகளுக்காகவே என்பதையேயாகும்.
அதாவது யாருக்கோ கொமில் அடித்துக் கொள்வதற்காகும். அதேபோன்று அடிவருடிகளின் மடியை நிரப்பிக் கொள்வதற்குமாகும்.
அதிவேக நெடுஞ்சாலைகளைப் போன்று வெட்டிக் காடடும்படியாக இல்லாவிட்டாலும் இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்கள் சுற்றாடல் காரணிகளைப் பொருட்படுத்தாது அந்த யுகத்தில் நிர்மாணிக்கப்பட்டதை நாம் அறிவோம்.
அவை அனைத்தினாலும் இடம்பெற்றிருப்பது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் மோசமான நிலைக்கு உள்ளாகியதேயாகும். இயற்கை அனர்த்தங்களினால் மக்கள் பாதிப்புக்குக்களுக்கு உள்ளாவது ஒன்று.
தமது செயற்பாடுகளினால் மக்கள் பாதிப்புக்களுக்கு உள்ளாவது மற்றொன்று. நாம் எதிர்க்க வேண்டியது, கண்டிக்க வேண்டியது இவ்வாறு மக்களை பாதிப்புக்களுக்கு உட்படுத்துவதையேயாகும்.