யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையத்தின் ஏற்பாட்டில் முற்றவெளி பகுதியில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் இணைந்து சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இன்று புதன்கிழமை இரவு 7.00 மணியளவில் இந்த ஆரம்ப விழா நடைபெற்றுள்ளது.
புத்த பெருமானின் உருவச்சிலைகள் மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு, புத்தபெருமானின் பிறப்பினை சித்தரிக்கும் காட்சிகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதன் போது, இந்து கிறிஸ்தவ பௌத்த இஸ்லாம் மத தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றதுடன், பக்திபாடல்களும் இசைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், இராணுவ மற்றும் முப்படைகளின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டதுடன், பொதுமக்களும் வெசாக் வெளிச்ச கூடுகளை பார்வையிட்டனர். குறித்த வெசாக் பண்டிகை எதிர்வரும் 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.