ஐ.பி.எல். வரலாற்றில் அதிரடி அரைசதம்: 15 பந்தில் விளாசி சுனில் நரைன் அசுர சாதனை

ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 75 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் களம் இறங்கினார்கள். கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். இருவரும் நடத்திய வாணவேடிக்கையை பார்க்கும்போது ஹைலைட் போட்டியை பார்த்ததுபோல் இருந்தது.

கிறிஸ் லின் முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். 2-வது ஓவரில் சுனில் நரைன் ஒரு பவுண்டரி அடித்தார். 3-வது ஓவரை சாஹல் வீசினார் அந்த ஓவரில் லின் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.

4-வது ஓவரை பத்ரி வீசினார். இந்த ஓவரில் சுனில் நரைன் ஹாட்ரிக் சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். அரவிந்த வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்தார். 5-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கி அரைசதம் அடித்தார். வெறும் 15 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதத்தை எட்டினார் சுனில் நரைன்.

இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து விளையாடிய அவர் 17 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.