தமிழகத்தில் இன்றுமுதல் பெப்சி, கொக்கா கோலா மற்றும் அதனைச் சார்ந்த வெளிநாட்டு குளிர்பானகள் கடைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இது வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிப்படையான கொள்கைகளுக்கு மாறாக அமைந்து விடும் என இந்திய குளிர்பான தயாரிப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
கொக்கா கோலா மற்றும் பெப்சி நிறுவனம், தமிழ் நாட்டில் 2000 குடும்பங்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு மற்றும் 5000 அதிக குடும்பங்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பை அளிக்கின்றது.
தாம் விரும்பியதை தெரிவு செய்யும் உரிமை தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து காணப்படும் என தாம் நம்புவதாக இந்திய குளிர்பான தயாரிப்பு சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு மத்தியில் கொக்கா கோலா நிறுவனம் தமது இந்திய முதலீட்டாளர்களை நீக்கிவிட்டு இலங்கைக்கு வரவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.