கட்டாக்காலி விலங்குகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினையான நிலைமையை கட்டுப்படுத்த இலங்கைக்குள் நடைமுறையில் உள்ள செயற்பாடுகள் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக இந்திய மத்திய அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
அகிம்சை மூலம் சமுகத்தின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் நீண்டகால நற்பிரதிபலன்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சார்க் பிராந்திய நாடுகளில் நிலவும் கட்டாக்காலி விலங்குகள் சம்பந்தமாக குறிப்பாக கட்டாக்காலி நாய்கள் காரணமாக ஏற்படும் சுகாதார மற்றும் சமூக பிரச்சினைகளை தீர்க்க செயற்பாட்டு ரீதியிலான வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டியது அவசியம் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.