அதிகளவு இராணுவத்தினர் வடக்கில் தேவையில்லை!

போர் நிறைவடைந்துள்ள நிலையில் சீருடை அணிந்து ஆயுதம் ஏந்திய படையினரை வடக்கில் அதிகளவில் நிலைநிறுத்த வேண்டிய தேவை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

காணிகளை வழங்குவது தொடர்பில் தேசிய கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டும். வறிய மக்களுக்கு காணிகள் வழங்கப்படுவதை எதிர்க்கவில்லை. செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு காணிகள் வழங்கப்படக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் டி.எஸ் சேனநாயக்க மகாவலி காணிகளை வழங்கினார். அதன் பின்னர் எவரும் காணிகளை வழங்கவில்லை.

போர் நிறைவடைந்துள்ள நிலையில் சீருடை அணிந்து ஆயுதம் ஏந்திய படையினரை வடக்கில் அதிகளவில் நிலைநிறுத்த வேண்டிய தேவையில்லை.

இதேவேளை, சீருடை மற்றும் ஆயுதங்கள் இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.