ஜெயலலிதாவின் வைர மோதிரத்தை இதுவரை அணிந்திருந்த சசிகலா ராசியில்லை எனக்கூறி அதனை கழற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றிய சசிகலா, ஜெயலலிதாவாகவே மாற முயற்சித்தார். ஜெயலலிதா அறை, அவர் பயன்படுத்தியது போன்ற உடை, கார், நாற்காலி என எல்லாவற்றையும் தனதாக்கிக் கொண்டார்.
மேலும் ஜெயலலிதாவின் வைர மோதிரத்தையும் அவர் அணிந்திருந்தார்.
இதனையடுத்து தனது ஆஸ்தான ஜோசியரிடம் இதுகுறித்து சசிகலா ஆலோசனை செய்துள்ளார். முதல்வராக பதவி ஏற்பது தள்ளிப் போவற்கு காரணம் வைர மோதிரம்தான். அதில் தான் தோஷம் உள்ளது என்று ஜோசியர் சொல்ல, ஜெயலலிதா அணிந்த வைர மோதிரத்தை சசிகலா தூக்கி எறிந்துள்ளதாக போயஸ்கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.