நீதிமன்ற தடைகளால் அதிருப்தியடைந்த டிரம்ப் : புதிய திட்டம்?

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருவோர்க்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதிபரின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் டிரம்பின் உத்தரவுக்கு தற்காலிக தடைவிதித்தது.
நீதிமன்றத்தின் தடைக்கு எதிராக அர்சு சார்பில் சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதனால், கடும் அதிருப்தி அடைந்துள்ள டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை தயார் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்த வாரத்தில் இது குறித்த மசோதாவில் டிரம்ப் கையெழுத்திடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.