அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த போது தனது புகைப்படத்தை வெளியிட ஜெயலலிதா சசிகலாவிடம் கூறியதாக அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தபோது, டாக்டர் சிவக்குமாரிடம் நன்றாக பேசியுள்ளார்.
ஒரு கட்டத்தில், நினைவு திரும்பியபோது, நான் இத்தனை நாட்கள் இங்கேயே இருந்து விட்டேனே?.. நான் நன்றாக இருக்கிறேன் என்று மக்களுக்குத் தெரிய வேண்டாமா? எனது புகைப்படத்தையும் என் அறிக்கையையும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் என்று மருத்துவர் சிவக்குமாரிடம் ஜெயலலிதா கூறினாராம்.
போயஸ்கார்டனுக்கு செல்வதையும் குறைத்து கொண்டார். அதனால் தான், டாக்டர் ரிச்சர்ட் பீலே அளித்த பிரஸ் மீட்டிற்கு கூட சிவக்குமார் அழைக்கப்படவில்லை” என்றார்.
ஜெயலலிதா உடல்நிலை பற்றி முழு விவரம் தெரிந்த டாக்டர் சிவக்குமாரை சசிகலா ஏன் ஓரம்கட்டி வைத்திருக்கிறார்? என்பது புரியாத புதிராக உள்ளது என அதிமுக நிர்வாகி கூறினார்.







