மிகவும் சூட்சுமமான முறையில் நாக்குக்குக் கீழே மறைத்து வைத்து தங்க பிஸ்கட்களைக் கடந்த முயற்சித்த இருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 180 கிராம் நிறைகொண்ட தங்க பிஸ்கட்களை, இந்தியாவின் திருவனந்தபுரம் பகுதிக்கு, இவர்கள் கடந்த முயற்சித்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இருவரில் ஒருவர், பேசுவதற்கு மிகுந்த சிரமப்பட்டதனால், அர்களின் நடத்தையில் எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக, கட்டுநாயக்க விமான நிலையப் பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.