இன்று நாமலுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாக்குமூலம் பெறுவதற்காக அனுப்பட்ட அழைப்பாணைகளை நாமல் ராஜபக்ச நிராகரித்ததன் மூலம் ஆணைக்குழுவை அவமதித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

கடந்த வழக்கு விசாரணையில் நாமல் ராஜபக்சவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட போது அதனை அவர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது