கடவுளாக மாறிய மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனக்கு கடவுளாக தென்படுவதாக மஹிந்தவின் ஆஸ்தான சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“மஹிந்த ராஜபக்ச எனக்கு கடவுள் போன்றவர். எந்தவொரு விடயத்திற்கும் அழுத்தம் பிரயோகித்ததில்லை.

எனக்கு சாதகமான அனைத்து விடயங்களையும் செய்யும் ஒரு நபராக மஹிந்த ராஜபக்ஸ செயற்பட்டுள்ளார். எனது தொழில் மீது உயிர் போன்று அன்பும் வைத்துள்ளார்.

இவ்வாறு இருக்கின்ற வேளையில், நான் ஒரு போதும் யாருடைய அழுத்தத்திற்கமைவாகவும் ஆரூடம் கூறியதில்லை” எனவும் அந்த ஜோதிடர் மேலும் தெரிவித்துள்ளார்.