புத்தரை அவமானப்படுத்திய வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!

பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் ஆடை அணிந்து சென்ற லெபனான் நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த மதத்தை அவதூறு செய்யும் வகையில், புத்த பிரானின் உருவம் பொறிக்கப்பட்ட கவுன் (சட்டை) ஒன்றை குறித்த பெண் அணிந்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

30 நாள் சுற்றுலா வீசாவில் கடந்த 23ம் திகதி இந்தப் பெண் இலங்கை வந்தடைந்துள்ளார்.

21 வயதான குறித்த லெபனான் நாட்டுப் பெண் உனவட்டுன பிரதேசத்தில் தங்கியிருந்தார் எனவும், பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஆடை அணிந்து காலி நகரில் சென்ற போது பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இந்த பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும், காலி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.