முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை செயற்பாட்டு ரீதியான அரசியலில் இருந்து விலகுமாறு பலமிக்க நாடு ஒன்றின் தூதரகமும் அயல் நாடு ஒன்றின் புலனாய்வு பிரிவும் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் ஒருவரை இரண்டு தரப்பும் தனித்தனியாக சந்தித்து இது குறித்து தெரியப்படுத்தியிருப்பதாக பேசப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி பிரபலம் குறைந்து வருவதால், அவரது கௌரவத்திற்காக இந்த கோரிக்கையை விடுப்பதாக மகிந்த ராஜபக்சவிடம் கூறுமாறும் கூட்டு எதிர்க்கட்சியின் அந்த தலைவரை சந்தித்த நபர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச தாமதமின்றி இந்த முடிவை எடுத்தால், அது அவரது குடும்பத்திற்கு மாத்திரமல்ல அவர்களின் அரசியல் எதிர்காலத்திற்கும் சிறந்ததாக அமையும் என சம்பந்தப்பட்ட தூதரகமும் புலனாய்வு பிரிவும் சுட்டிக்காட்டியுள்ளன.