அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சற்றுமுன்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசினார் நாஞ்சில் சம்பத்
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கட்சி நடவடிக்கைகள் எதிலும் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா தனக்கு அளித்த இன்னோவா காரை அதிமுக அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இதனால் அதிமுக-வில் இருந்து விலகப் போகிறார் என்ற தகவல் வெளியானது.
இதனிடையில் இன்று சசிகலாவை சந்தித்து பேசிய பின்னர், சின்னம்மா சசிகலா ஆணைப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும், அதிமுகவில் நீடிப்பதாகவும் கூறியுள்ளார்.
திமுக அழைத்தால் அக்கட்சியில் இணைவேன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக மு.க ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என கூறி வந்த நஞ்சில் சம்பத் அதிமுகவில் நீடிப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.