பேச்சுவார்த்தைக்கு சென்ற சசிகலா கோஷ்டி தலைதெறிக்க ஓடியது ஏன் தெரியுமா?

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனை சமாதானப்படுத்த சசிகலா கோஷ்டியினால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியான பி.எச். பாண்டியன், தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவால் நீண்டகாலமாக ஓரம்கட்டப்பட்டிருக்கிறார்.

இதனால் இவர் தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிரவேச முயற்சியின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பி.எச். பாண்டியனை சமாதானப்படுத்த சசிகலா தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் விதித்த நிபந்தனை மன்னார்குடி கோஷ்டியை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

பி.எச். பாண்டியன் தனக்கு இரு பதவிகள் தான் வேண்டும் ஏதேனும் ஒரு பதவி தர முடியுமா என்று கேட்டுள்ளார்.

உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை சின்னம்மாவிடம் வந்து நேரில் கேளுங்கள், நிச்சயம் செய்து கொடுப்பார் என்று தூதுவர்களாக வந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதற்கு பி.எச். பாண்டியன் நான் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கிறேன். எனக்கு கட்சி பொதுச்செயலர் பதவி அல்லது முதல்வர் பதவி தர முடியுமா? என்று கிண்டலாக கேட்டுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத சசிகலா கோஷ்டி அதிர்ச்சியடைந்து வந்த வழியாக தலைதெறிக்க ஓடிவிட்டார்களாம்.