கொழும்பில் கடற்கரையோரங்களில் இடம்பெறும் விருந்துபசாரத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து நேற்றைய தினம்(02) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் ஒன்றின் தலைவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரிடம் இருந்து 30 போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு விசேட செயற்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி பீ.என்.ஹேமந்த தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் இன்றைய தினம் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.