இந்திய அணி வீரர்களுக்கு ஊக்கத் தொகை இல்லை!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் வாரியம் பாராட்டுகளை தெரிவித்து உள்ளது.

இதுபோன்ற பெரிய தொடரில் அசத்தும்போது கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும். ஆனால் இங்கிலாந்து தொடரில் சாதனை படைத்த இந்திய அணிக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்படவில்லை.

லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தாததால் சுப்ரீம் கோர்ட்டு, கிரிக்கெட் வாரியத்துக்கு நிதி ஆதாரத்துக்கு கடும் கட்டுப்பாடு விதித்து உள்ளது.

சர்வதேச போட்டியை நடந்த போதுமான நிதிக்கு கூட சுப்ரீம்கோர்ட்டை கிரிக்கெட் வாரியம் நாட வேண்டியது உள்ளது. ஆனால் கிரிக்கெட் வாரியத்தால் ஊக்கத் தொகையை அறிவிக்க முடியவில்லை.