ஜோர்டானில் துப்பாக்கி சூடு: கனடா சுற்றுலா பயணி உள்பட 5 பேர் பலி!

ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் இருந்து தெற்குப் பகுதியில் 120 கி.மீட்டர் தொலைவில் உள்ள பிராந்தியம் கரக். மலைப்பகுதிகளை அதிகமாக கொண்ட இந்த நகரம் சுற்றுலாத்துறைக்கு பெயர்போனது. இங்கு மிகப்பெரிய சிலுவைப்போர் அரண்மனை (Crusader castles) உள்ளது.

இங்குள்ள காவல்நிலையத்தை நோக்கி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் நான்கு போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் விரைந்து வந்து, துபாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.