டெங்கு தொற்றால் 47ஆயிரம் பேர் பாதிப்பு!

டெங்கு தொற்று காரணமாக இதுவரை 47 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

டெங்கு தொற்று காரணமாக இதுவரை 77 பேர் மரணித்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

டெங்கு தொற்று காரணமாக கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு தொற்று காரணமாக கடந்த வருடம் 29 ஆயிரத்து 777 பேர் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.