இரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ!

வெட்ட வெட்ட மீண்டும் துளிர்­விடும் வாழை மரத்தின் பயன்­பா­டுகள் எண்­ணி­ல­டங்­கா­தவை. இதில் வாழைப்­பூவும் முக்­கிய அங்கம் வகிக்­கின்­றது. வாழைப்­பூவை உண­வாக இரு­வாரம் உட்­கொண்டால் இரத்­தத்தில் கொழுப்­புத்­தன்மை, பசைத்­தன்­மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீர­டையும்.

இரத்த ஓட்டம் சீர­டையும் பட்­சத்தில் ஆக்­ஸிஜன், இரும்­புச்­சத்து அதி­கப்­ப­டி­யாக உட்­கி­ர­கிக்­கப்­ப­டு­வதால் இரத்தச் சோகை என்­பது தலை தூக்­காது. துவர்ப்பு தன்­மையை தன்­ன­கத்தே அடக்­கி­யுள்ள வாழைப்பூ இரத்­தத்தில் கலக்கும் அதிக அளவு சர்க்­க­ரையை கூட மட்­டுப்­ப­டுத்தும்.

இன்­றைய மாறு­பா­டான உணவு முறை பழக்கம், மன உளைச்­சலால் ஏற்­படும் செரி­யாமை இவை­களால் வாயு சீற்றம் அதி­க­மாகி வயிற்றில் புண்கள் ஏற்­பட வாய்ப்புண்டு. இப்­புண்கள் ஆற வாழைப்­பூவை குறைந்­தது மாதத்­துக்கு 5 நாட்கள் சமைத்து உண்­ணலாம்.

மூல நோய்கள், இரத்தம் வெளி­யே­றுதல், உள் மூல – வெளி மூல புண்கள், கடுப்பு, மலச்­சிக்கல், சீத­பேதி, வாய்ப்புண், வாய்­துர்­நாற்றம் போன்­ற­வை­க­ளை நிவா­ர­ண­மாக்கும் தன்­மையை தன்­ன­கத்தே கொண்­டது வாழைப்பூ. பெண்­க­ளுக்கு ஏற்­படும் கர்ப்­பப்பை கோளாறு, மாத­விடாய் பிரச்சி­னை­களை களைந்­தெ­றியும் தன்மை கொண்­டது.

மொந்தன், பாளை­யங்­கோட்டை வகை­களின் வாழைப்பூ உண்­பது சால சிறந்­த­தாகும். வாழைப்பூ வடை, கட்லட், பக்­கோடா என பல­கா­ரங்­க­ளா­கவும் செய்து உண்ணலாம்.