வரலாறு காணாத வெப்ப நிலையில் யாழ் குடாநாடு!

தற்பொழுது யாழ். குடா நாட்டில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வரும் இவ்வேளையில் வரலாறு காணாத வகையில் வெப்பநிலை 19.8  செல்சியஸ் ஆக இருப்பதாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தென் மேற்கு வங்க கடலில் உருவான ‘நடா’ சூறாவளி தற்சமயம் காங்கேசன்துறையில் இருந்து வடக்கே 200 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ள நிலையில்  இப்பொழுது  தமிழகத்தின் வடக்கு பக்கமாக நகர்ந்து  வருகின்றது.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் 30   தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகம் வரையில் காணப்படும்.

ஆனால் இதன் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரை அதிகாரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.நேற்று மாலை 16.8 பாகை செல்சியஸ் ஆக காணப்பட்ட குடா நாட்டின் வெப்ப நிலை தற்சமயம் 19.8 பாகை செல்சிஸ் ஆக அதிகரித்து காணப்படுகின்றது.

இதன் காரணமாக அதிக குளிர்  காணப்படும் என்பதோடு இந் நிலை தொடருமாகவிருந்தால்ல் ஆபத்து எனவும் கூறப்படுகின்றது.

இன்றைய தினம் காலை 8.30 மணி வரையில் 35 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதில் பருத்தித்துறை- வல்லிபுரம் பகுதியில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.