கருப்பு பணம்: சென்னையில் பணத் தொட்டி திறப்பு

சென்னை : கருப்பு பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள் ,அப்படி கொடுக்க பயமாக இருந்தால் நாங்கள் பணத்தொட்டி திறக்கிறோம் அதில் போடுங்கள் என்று இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.

கருப்புப்பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நவம்பர் 9 முதல் ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த செவ்வாய்கிழமை அறிவித்தார். ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் கடும் வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் சில இடங்களில் பணம் எரிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தனர்.