தூய்மை நவிமும்பை திட்டத்தின் தூதராக பாடகர் சங்கர் மகாதேவன் நியமனம்

நவிமும்பை மாநகராட்சி சார்பில் ‘தூய்மை நவிமும்பை’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நகரை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தநிலையில், தூய்மை நவிமும்பை திட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த திட்டத்திற்கான தூதராக பாடகர் சங்கர் மகாதேவனை நவிமும்பை மாநகராட்சி கமிஷனர் துக்காராம் முண்டே அறிவித்து உள்ளார்.

இந்தநிலையில், நேற்று சங்கர் மகாதேவன் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கமிஷனர் துக்காராம் முண்டேவை சந்தித்தார். அப்போது அவரை கமிஷனர் துக்காராம் முண்டே கட்டி தழுவி வரவேற்றார். பின்னர் இருவரும் தூய்மை நவிமும்பை திட்டத்திற்கு வலுசேர்க்கும் முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.