தற்கொலைக்கு முயன்ற யுவதியின் உயிரை காப்பாற்றிய ரயில் பாதை!

யுவதி ஒருவர் நீர்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்த போது ரயில் பாதையில் சிக்கி உயிர் தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் தலவாக்கலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை ரயில் பாலத்திலிருந்து மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்குள் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள இந்த யுவதி முயற்சித்துள்ளார்.

பத்தனையில் அமைந்துள்ள பிரபல ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஒன்றின் பயிலுனர் ஆசிரிய மாணவியே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

நீர்த் தேக்கத்தில் குதிக்க முயற்சித்த யுவதி தவறுதலாக புகையிரத பாதை கொங்கிரீட் தடுப்புக்காவலரணிற்குள் சிக்குண்ட நிலையில் இருந்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர்.

21 வயதான குறித்த யுவதி வட்டகொட மடகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓராண்டு காலமாக நீடித்து வந்த காதல் உறவு முறிவடைந்த காரணத்தினால் ஏற்பட்ட மன விரக்தியினால் யுவதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

காயமடைந்த யுவதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.