வர்த்தகர் கொலை – காட்டுப்பகுதியில் இருந்து சடலம் மீட்பு

பலாங்கொட – கல்தொட, பிபிலவல பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 32 வயதுடைய நபரை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த நபரை காட்டுப்பகுதியில் இருந்து பொலிஸார் சடலமாக மீட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.