வீட்டுக்கு விளையாட வந்த சிறுமிகள் கொடூர பலாத்காரம்: 16 வயது பையன் கைது!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகில் 4 வயதான சிறுமிகள் இருவரை 16 வயது சிறுவன் ஒருவன் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

கடந்த சனிக்கிழமையன்று இரண்டு சிறுமிகளும், பக்கத்து வீட்டில் உள்ள சிறுவன் ஒருவனின் வீட்டுக்கு விளையாட சென்றுள்ளனர்.

அப்போது சிறுவனின் வீட்டில் அவனை தவிர வேறு யாரும் இருக்கவில்லை.   வீட்டில் யாரும் இல்லாத இந்த வாய்ப்பை பயன்படுத்திய அந்த சிறுவன் வீட்டின் கதவை பூட்டிவிட்டு இரண்டு சிறுமிகளையும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனை பெற்றோர்களிடம் மறைத்த அந்த சிறுமிகள் இரண்டு நாட்கள் கழித்து தங்கள் உறுப்பு வலிப்பதாக பெற்றோர்களிடம் கூற விஷயம் வெளியே தெரிந்துள்ளது.   இதனையடுத்து அந்த சிறுவன் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, விசாரணை நடத்தி அந்த சிறுவனை கைது செய்து வேலூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அந்த சிறுவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர் கலைச்செல்வி கூறியுள்ளார்.