கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மூன்று முன்னாள் இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஓய்வூதியம் பெரும் கால எல்லை நிறைவடை முன்னர் (12 வருடங்கள்) கடமையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் தமக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரி இவ்வாறு போராடி வருகின்றனர்.
இவர்களில் மூவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.