வீடொன்றில் பாரிய அளவிலான கஞ்சா மீட்பு!

வவுனியாவில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வவுனியா, கதிரவேலு பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன், 45 வயதுடைய ஒருவரையும் கைது செய்து ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.