“விஜய் மிகப்பெரிய என்டர்டெயினர். அவர் அரசியலுக்கு வந்தாலும், சினிமாவை விட்டு விடக்கூடாது. அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் சேலத்துக்கு வந்த நடிகர் சசிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களிடத்தில் இந்த வரவேற்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் அதை மறந்து மகிழ்ச்சியாகக் கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்று படத்தின் பெயரை வைத்துள்ளோம். மக்கள் மீது நம்பிக்கை வைத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்பத் திரைப்படத்தை எடுத்து உள்ளோம்.