அம்பாறை சம்மாந்துறை செந்நெல் கிராம பகுதியில் விசர் நாய்க்கடிக்குள்ளாகி 7 பேர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (12) பதிவாகியுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பகுதியில் நாளை கட்டாக் காலி நாய்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.