பொலிசாரிடம் உண்மையை சொன்ன ஈஸ்வரி கதையில் திடீர் திருப்பம்

எதிர்நீச்சல் சீரியலில் வெண்பா தனது தந்தையை நினைத்து கவலைப்பட்டு கொள்ளும் நிலையில், ஈஸ்வரி பொலிஸ் அதிகாரியிடம் உண்மையை உடைத்துள்ளார்.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

ஈஸ்வரி உடைத்த உண்மை
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

காட்டில் கத்திக் குத்து பட்டு கிடந்த ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பது தெரியாமல் அவரது மகள் வெண்பா ஈஸ்வரியிடம் கேட்டு வருகின்றார்.

மேலும் ஈஸ்வரி தர்ஷினி அப்பா என்று அழைப்பது ஜீவானந்தத்தினை என்று கூறி உண்மையை உடைத்துள்ளார். சற்று விறுவிறுப்பு இல்லாமல் சென்று கொண்டிருந்த குறித்த சீரியல் தற்போது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.