நாட்டில் அரியவகை மீன்களை பிடித்த இருவர் கைது!

ஹிக்கடுவ – பவளப்பாறை சரணாலயத்தில் அரியவகை மீன்களை பிடித்த இருவரை வனஜீவராசி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் அனைத்தும் அதிகர்களால் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் சுற்றுலாப்பயணிகளுக்கு விற்பனை செய்வதற்கே மீன்கள் பிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று காலி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.