யாழ் தேவாலயம் ஒன்றில் திருட்டு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை புலோலிப் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றின் உள்ளே சிலையுடன் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 25ஆம் திகதி இரவு புலோலிக்கு தெற்கே உள்ள புனித தோமையார் கத்தோலிக்கத் தேவாலயத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்தச் செயல் மத நாசகாரச் செயல் அல்ல என்றும், தங்க நகையை எடுத்துச் செல்லும் நோக்கில் ஒருவர் சொருபத்தை சேதப்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக் கப்படுவதாகவும் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.